Header image alt text

ranilஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நியூசிலாந்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

accidentதிருகோணமலை, கிண்ணியாப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டலடியூற்றுப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன், 9 பேர் காயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியிலிருந்து திருகோணமலை நகர் நோக்கி மீன் ஏற்றிக்கொண்டு பயணித்த வடி ரக வானும் ஆலங்கேணிப் பகுதியிலிருந்து கண்டல்காட்டுப் பகுதிக்குச் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

dsssஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரசாங்க வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு சென்ற அவர் அங்கு வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

election.....2016 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புகளில் தமது பெயர்களை பதிவு செய்வதற்காக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.

இதனால் தமது பெயர்களை பதிவு செய்யாத வாக்காளர்கள் இன்றைக்குள் பதிவு செய்யுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர்களின் நலன்கருதி இன்றைய தினம் நாடெங்கிலும் உள்ள மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்கள் நள்ளிரவு 12 மணிவரை திறந்திருக்கும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் மொஹமட் கூறியுள்ளார்.