Header image alt text

lanka-chinaஇலங்கைக்கு 120 மில்லியன் யுவான் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க சீன இணக்கம் தெரிவித்துள்ளது. ஆதி நவீன ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்கவும் சீன அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது இலங்கை – சீன பாதுகாப்புக் கலந்துரையாடலின் போதே இதற்கான இணக்கப்பாடுகளும் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. Read more

ANANDASANGAREEகௌரவ ரணில் விக்ரமசிங்க, பிரதம மந்திரி
அன்புடையீர்

சாதாரண மனிதனின் பரிதாபநிலை

“யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி தேவை” என்ற தலைப்பில் கடந்த 13-06-2016 இல் மேதகு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் பிரதி தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது தங்களின் கவனத்தை ஈர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அக்கடிதத்தில் அவசிய தேவையுள்ளவர்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ முன்பு உணவு பொருட்கள் வழங்கப்பட்ட முறையை மீளவும் புதுப்பிக்குமாறு கேட்டிருந்தேன். Read more

europeanஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டசக் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். இலங்கை அடைந்துள்ள தற்போதைய அரசியல் மற்றும் சமூக மறுசீரமைப்புகள், ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான விளிம்பிற்கு கொண்டுவந்துள்ளதாகவும் டொனால்ட் டசக் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

dfdfஆயிரம் ரூபா சம்பளம், வருடத்தில் 300 நாட்கள் வேலை, நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் மலையகத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அக்கரபத்தனை – பெல்மோரல், கிரன்லி, கிலஸ்டல் ஆகிய தோட்ட தொழிலாளர்கள் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, 800ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெல்மோரல் கொழுந்து நிறுவை செய்யும் இடத்திலிருந்து பேரணியாக தொழிற்சாலை வரை சென்றனர். Read more

aank-shukiஇலங்கையில் ஏற்பட்ட ஜனநாயக மாற்றங்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள கருத்து தெரிவித்த மியன்மார் வெளிவிவகார அமைச்சர் ஆன் சாங் சூகி ஆன் சாங் சூகி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வாழ்க்கை தொடர்பில் தனது திருப்தியினையும் வெளியிட்டார்.

இந்தியாவின் கோவாவில் இடம்பெற்றுவரும் பிரிக்ஸ் – பிம்ஸ்டெக் மாநாட்டில் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மியன்மாரின் அரச சபை உறுப்பினரும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சருமான ஆன் சாங் சூகி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. Read more

police-stationகிளிநொச்சியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் கி.ரதீஸ் என்ற வர்த்தகர் இன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – இடைக்குறிச்சி – வரணியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சியில் காணாமல் போயிருந்தார். Read more

nadesanமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்கை நிரூபமாவின் கணவரான திருக்குமரன் நடேசன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மல்வானையில் உள்ள 16 ஏக்கர் காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார். Read more

viladimir-putinஇலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்து வருவதாக குறிப்பிட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இலங்கைக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பிரிக்ஸ் – பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிற்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே ரஷ்ய ஜனாதிபதி புடின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Read more

chinaஅணை மற்றும் சாலைக் கட்டமைப்புக்கு உட்பட்ட வகையில், இருதரப்பு நடைமுறைக்கேற்ற ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்து வதற்கு சீன, இலங்கை தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கோவாவில் நடைபெறும் எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்றிரவு இருதரப்புப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. Read more

dhilrukshiஇலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் முப்படைத் தளபதிகள் சிலரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். Read more