Header image alt text

cctv (2)வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் மற்றும் மகசின் சிறைசாலை வளாகங்களில் சி.சி.டி.வி கமெரா பொருத்தத் தீர்மானித்து, முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம், தற்போது கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறைச்சாலைகளுக்கு சி.சி.டி.வி கமெரா பொருத்துவதற்கு 30 மில்லியன் ரூபாய் செலவாகும் என்பதனால் இவ் வேலைத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாரளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். Read more

courtsகுற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர முன்வைத்த மனு தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தன்னைக் கைதுசெய்வதைத் தவிர்க்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு, தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தத்தை ஏற்படுத்துமாறு கோரிய இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more

votesவெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள், இலங்கையில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டுள்ளார். Read more

courtsயாழ். தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமஅலுவலர் பிரிவில் கடமையாற்றும் பெண் கிராம அலுவலரை கடத்திய மூவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 13 மாத சிறைத்தண்டனை விதித்து, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி சிறீநிதி நந்தசேகரன், நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், கிராம அலுவலரின் சகோதரனை தாக்கி, அவருடைய 3 பற்களை உடைத்தமைக்காக ஒரு பல்லுக்கு 1 இலட்சம் ரூபாய் வீதம் 3 பற்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். Read more

dsc05031தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு நிதியத்தின் உதவியுடன், மாமடுச்சந்தி, பழம்பாசியில் “மரக்கறி பழம் பொதியிடல் நிலையம்” நேற்று (11.10.2016.) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், கந்தையா சிவநேசன், முல்லைதீவு அரசாங்க அதிபர், ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் நந்தசிறீ, மேலதிக விவசாயப் பணிப்பாளர் நாயகம், Read more

img_9358மலையகத்தில் தொடரும் சம்பள உயர்வு உட்பட்ட கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா வாழ் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் இன்றயதினம் பேரணியொன்று சிந்தாமணி ஆலய முன்றலில் ஆரம்பமாகி வவுனியா பேருந்து தரிப்பு நிலையத்தில் ஆதரவு கோரிய கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதிக்குரிய மகஜர் கையளிப்புடன் ஆதரவு பேரணி நிறைவுபெற்றது.
Read more

sfdமனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென ஐ.நாவின் சிறுபான்மையினர் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் புனரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். Read more

sfdfதமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிராதன பிரச்சினைகளான காணி கையகப்படுத்தல் மீள்குடி யேற்றம், காணாமல்போனவர் விவகாரம், மற்றும் அரசியல் கைதிகள் விடயம் ஆகிய வற்றிற்கு தீர்வு கிடைக்காத நிலையில் நல்லிணக்கம் என்பது சாத்தியப்படாது என வட மாகாண அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையின உரிமைகள் தொடர்பான விஷேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா இன்று யாழப்பாணத்திற்கு விஜயம் செய்து வடமாகாண அமைச்சர்களை சந்தித்தபோது அவர்கள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றனர். Read more

graduateவேலையற்ற பட்டதாரிகளால் மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு, காந்தி பூங்கா வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை, வேலையற்ற பட்டதாரிகளைக் கொண்டு நிரப்புமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

sadsdநிலவும் கடும் வரட்சி காரணமாக, நாட்டின் சில பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை கிராமத்தில் 162 குடும்பங்கள் வாழ்கின்றனர். Read more