Header image alt text

muslimஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாகப் பௌத்த மதகுருமார்கள் உட்பட கடும் போக்கு பௌத்தர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கேட்டுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலங்களில் இடம் பெற்ற கடும் போக்கு பௌத்தர்களின் இன ரீதியான செயல்பாடுகள் தொடர்பாக ஆறு அமைச்சர்கள் , மூன்று இராஜங்க அமைச்சர்கள் , இரு துணை அமைச்சர்கள் உள்ளிட்ட 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும் ஒப்பமிடப்பட்ட மனுவொன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. Read more

warthaடும் புயலான வர்தாவின் தாக்கத்தால்,  சென்னை மாநகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. வர்தா புயலின் சீற்றத்தால் வேரோடு மரங்கள் வீழ்ந்தன.

இன்று திங்கள்கிழமை மாலையில் சென்னைக்கு மிக அருகே கரையை கடந்த அதி தீவிர புயலான ‘வர்தா’, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது.

இன்று காலை முதலே, சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். Read more

ceylon-teachers-unionவட மாகாணத்தில் 2017ம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த ஆசிரியர்களின் இடமாற்றங்களை ஏப்ரல் வரை தாமதித்து வழங்கும் அம் மாகாணக் கல்வியமைச்சின் திட்டமிடப்படாத நடவடிக்கைக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம் என, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Read more

malayakamவெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சவுதிக்கு சென்று, கணவனை பறிகொடுத்ததையும் அறியாது, உரிய முறையில் ஊதியமும் வழங்கப்படாது நிலையில் நாட்டுக்கு வந்த பெண்ணொருவர் பற்றி தெரியவந்துள்ளது.

20.08.2014 தனது வீட்டிலிருந்து சவூதி – ரியாத் மாநிலத்திற்கு வீட்டு பணிப் பெண்ணாக சென்றார் மஸ்கெலியா – கிலன்டில் தோட்டத்தைச் சேர்ந்த கணேஷன் புஸ்பலீலா.  , அவ் வீட்டின் முதலாளி ஏமாற்றியதன் காரணமாக இரு வருடங்களின் பின் உழைத்தமைக்கு ஊதியம் கிடையாது வெறுங்கையுடன் கடந்த 8.12.2016 அன்று நாட்டுக்கு திரும்பியுள்ளார். Read more

thipaசசிகலாவையோ அவரது உறவினர் ஒருவரையோ வாரிசாக ஒரு போதும் எனது அத்தை ஜெயலலிதா ஏற்று கொண்டதில்லை என்று அண்ணன் மகள் தீபா கூறினார்.

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- Read more

sushmaஇந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷம்h சுவராஜ் (64 வயது) பல வாரங்களுக்குமுன், தன்னுடைய சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். சுஷ;மா சுவராஜுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது Read more

heiroகெய்ரோவின் காப்டிக் தேவாலயத்திற்கு அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
உள்ளூர் நேரப்படி காலை 10.00 மணிக்கு இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more

thurukiதுருக்கியின் ,ஸ்தான்புல் நகரின் மத்திய பகுதியில் நடந்த ,ரு குண்டு வெடிப்புகளில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; அதில் பெரும்பாலானோர் போலிஸ் அதிகாரிகள் ஆவர். மேலும் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கால்பந்து ஆட்டம் முடிந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு, கால்பந்து மைதானத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கலவர தடுப்பு போலிஸாரின் வாகனத்தை குறி வைத்து முதல் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. Read more

nigiriaநைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் இருக்கும் உயொ நகரில், தேவாலயம் ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர் என அதிபர் முகமது புகாரி தெரிவித்துள்ளார்.

அதில் குறைந்தது 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என சிலர் கூறுகின்றனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. Read more

klinochi01மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி கவனயீர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
 
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதைக் கண்டித்தும், யுத்த மோதல்களின்போதும், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டதைக் கண்டித்தும் யாழ் நகரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. Read more