Header image alt text

jaliya-wickramasuriyaஐக்கிய அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜாலிய விக்கிரமசூரிய கடந்த நவம்பர் 18ஆம் திகதி அமெரிக்காவிலிருந்து, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோது நிதி குற்றபுலனாய்வு விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இலங்கை தூதரகத்துக்காக புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட பணத்தில் 66 இலட்சம் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

sfdமட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியிலுள்ள களுதாவளை கடற்கரையில் விமானமொன்றின் பாகம் கரையொதுங்கியுள்ளது. இன்று காலை 7.30 அளவில் மேற்படி விமான பாகம் கரையொதுங்கியதாக களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வீ.ரி.சிசிர தெரிவித்துள்ளார்.

விமானத்தின் இறக்கை பகுதி ஒன்றே கரையொதுங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் கடற்படையினருக்கும், விமானப் படையினருக்கும் அறிவிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் களுதாவளை கடற்கரைக்கு வருகை தந்துள்ளனர். கரையொதுங்கியுள்ள விமானத்தின் பாகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வீ.ரி.சிசிர தெரிவித்துள்ளார். Read more

mavai_mp_002மக்கள் தந்த ஆணைகளின் அடிப்படையில், எங்களை நாங்களே ஆளுகின்ற தீர்வை எட்டுவதற்காக உழைப்பது தான், எமது நோக்கம் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பூநகரி பிரதேச செயலகத்தில், புதிய கட்டிடத் திறப்பு விழா நிகழ்வு, நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மாவை சேனாதிராஜா, மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் அவர் கூறுகையில், “எங்களுடைய மக்கள் மாற்றத்தை விரும்பி, ஓர் ஆட்சியை அமைத்திருக்கின்றார்கள். இதேவேளை, தமிழ் பிரதேசங்களில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்திருக்கின்றார்கள். Read more

ban ki moonஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரான பான் கீ முன், பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அலைபேசியில் தொடர்புகொண்டுள்ளதுடன், இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கை, சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டிய அவர், நல்லிணக்க செயற்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார். Read more

sfdfdவவுனியா பரநாட்டான்கல் பிரதேசத்தில் 38 வயதுடைய குடும்பஸ்தவர் ஒருவர் இன்று காலைமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியை மீட்டுத் தருமாறு கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த திங்கட்கிழமை (19) குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் மனைவியை விரட்டியுள்ளார். மனைவியும், பிள்ளைகளும் இதுவரை வீடு திரும்பாததையடுத்து சி.சிவகுமார் (38) என்ற குடும்பஸ்தர் மனைவி, பிள்ளைகள் வரும்வரை தான் சாகும்வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார். Read more

p1400523யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது சமய ஆச்சாரப்படி நிகழ்வுகள் ஆரம்பமாகி பதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இதில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார். மேற்படி நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், நலன்விரும்பிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Read more

p1400630கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்பு தமிழ் சங்கத்தில் மணிமேகலைப் பிரசுரத்தின் தமிழ்வாணன் நூல்கள் 23 வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. ரவி தமிழ்வாணன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிங்கப்பூர், தமிழகம் மற்றும் குவைத் ஆகிய இடங்களிலிருந்து பல அறிஞர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

இதில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌர தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் அதிதியாக கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வில் கவிஞர் கண்ணதாசனின் புதல்வி விசாலி கண்ணதாசன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். Read more

maheshini-colonneவெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்கள் தொடர்பாக விஷேட கவனம் செலுத்தியுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஷேடமாக ரஷ்யத் தூதுவர் கொலை செய்யப்பட்ட பின்னர் இது குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷனி கொலென்னே சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மலேஷியாவுக்கான இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் அவருக்கு விஷேட பாதுகாப்பு பெற்றுக் கொடுக்குமாறு அந்த நாட்டுக்கு தெரியப்படுத்தியதற்கமைய தற்போது அது செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

japan-lankaகடற்படைக்கு கப்பல் ஒன்றை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜப்பானின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா, இதனைத் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பான்-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்பதற்காக, ஜப்பானின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா இலங்கை வந்துள்ளார். நேற்று பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, பிராந்திய நிலைமைகள், பாதுகாப்புக் கொள்கை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பரிமாற்றங்கள் உள்ளிட்ட இருதரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. Read more

ambulance-driversவட மத்திய மாகாண அம்பியூலன்ஸ் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. ஊழியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதில் உள்ள குளறுபடிகளுக்கு எதிராகவே இந்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டது.

அத்துடன் தங்களிள் கோரிக்கைக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி நேற்று மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயினும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத விதத்தில் செயற்படுவதாக வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித்த பண்டார குறிப்பிட்டுள்ளார். Read more