Header image alt text

sdf100 நாட்களுக்கும் மேலாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட கேப்பாப்பிலவு மக்கள் தமது போராட்டத்தை இன்று கொழும்பில் முன்னெடுத்திருந்தனர். பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள கேப்பாப்பிலவு கிராமத்தை விடுவிக்கக்கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பை கேப்பாப்பிலவு மக்களும் சம உரிமை இயக்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். கேப்பாப்பிலவு உள்ளிட்ட வடக்கில் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. Read more

cv vigneswaranவட மாகாண கல்வி அமைச்சராக ஒருவர் நியமிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல் தொடர்பில் முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் முதலமைச்சர் என்ற வகையில் தாமே முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

britishஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேறியதன் பின்னரும் தமது நாட்டு சந்தையில் இலங்கைக்கான வரிச்சலுகை, தொடரும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து பெருந்தொகையான ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட பொருட்கள் பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதற்காக வழங்கப்படுகின்ற வரிச்சலுகை அல்லாத பட்சத்தில், இலங்கையின் உற்பத்திகள் 10 சதவீத இலாப இழப்பை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதன் பின்னரும் இந்த வரிச்சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

dead.bodyபாடசாலை மாணவர்கள் உயிரிழக்கும் வீதம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக, தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் டொக்டர் கோதா கொட தெரிவித்துள்ளார்.

திடீர் அனர்த்தங்கள் மற்றும் டெங்கு தொற்று போன்றவற்றினால் அதிகளவான பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Anna (21)வட மாகாண சபையில் அண்மையில் நிலவிய கொதிநிலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவினை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பலரின் வாய்க்கு அவலாக அமைந்திருந்தது. எக்காரணம் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவினை அனுமதிக்கப்போவதில்லை எனக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சிக்கும், வட மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சமரச முயற்சிகள் பற்றியும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உடைவு தவிர்க்கப்பட்டது பற்றியும் தினகரன் வாரமஞ்சரிக்கு மனம் திறக்கின்றார்…. -(வாசுகி சிவகுமார்)-

வட மாகாண முதலமைச்சரின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம், அவரைப் பதவி விலக்குவது தொடர்பாக வடக்கில் இருந்த கொதிநிலை சற்றே தனித்திருக்கின்றது. தற்போதைய சுமுக நிலை ஏற்படுவதற்குக் காரணமாயிருந்தவர்களில் நீங்களும் ஒருவர். வடமாகாண சபையில் மீண்டும் இயல்புநிலை தோன்றிவிட்டதா?

இப்போதைக்கு முதலமைச்சரின் மீது என்ன காரணத்துக்காக நம்பிக்கையில்லாhத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதோ, அது தீர்க்கப்பட்டு விட்டது. தமிழரசுக்கட்சி அதன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை வாபஸ் பெற்றுவிட்டது. விசாரணைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய குற்றம் சாட்டப்பட்;டவர்களை விலக்கி குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை நிபந்தனையின்றி தொடர்ந்தும் பதவியில் நீடிக்கச் செய்வது தொடர்பில் சிக்கல்கள் தற்போது இல்லை. ஏனைய இரு அமைச்சர்கள் மீதும் விசாரணைகளை நீடிப்பதா இல்லாயாவென்பது மற்றொன்று. அது முதலமைச்சர் விரும்பினால் தொடரப்படக்கூடியது. Read more

ewrwerகிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்திற்குள் மழை வெள்ளம் பரவாமல் தடுப்பணை அமைக்குமாறு மக்கள் மாவட்ட செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 1983ம் ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்செயல்களினால் இடம்பெயர்ந்த மக்களுக்கென இக் கிராமம் உருவாக்கப்பட்டது.

அவசரமாக உருவாக்கப்பட்ட இக் கிராமத்தில் தாழ்நிலப் பகுதிகளை நோக்கி மழை காலத்தில் காட்டாறு வெள்ளம் கிராமம் முழுவதிலும் பரவுவதன் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். மேலும், இக் கிராமத்தில் கிழக்குப் பகுதியில் தொடங்கப்படும் அணையை, ஆனைவிழுந்தான் குளத்தின் அணையுடன் இணைப்பதன் மூலம் கிராமத்திற்குள் வெள்ள நீர் பரவாது எனவும், இது தொடர்பாக கடந்த முப்பது ஆண்டுகளாக அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் வெள்ளத் தடுப்பரண் அமைக்கப்படவில்லை எனவும் மக்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

australia refugeesஇலங்கையர்கள் 20 பேரை சட்டவிரோத குடியேறிகள் என்றுக்கூறி அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடுகடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் படைப்பிரிவினரால் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். விசேட வானூர்தியின் மூலம் இவர்கள் நேற்று நாடு கடத்தப்பட்டனர்.

அண்மைக்காலத்தில் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்களே நாடு கடத்தப்பட்டவர்கள் என த ஒஸ்ரேலியன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. எனினும் நாடு கடத்தப்பட்டவர்கள் எப்போது கடலில் வைத்து தடுக்கப்பட்டவர்கள் என்ற தகவலை அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் வெளியிடவில்லை.

postஅஞ்சல் சேவையாளர்கள் ஒன்றியம் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அஞ்சல் காரியாலயங்களை ஓய்வு விடுதிகளாக மாற்றும் செயற்திட்டத்திற்கு அனுதி வழங்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தல், நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னதாக குறித்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12ஆம் திகதி அஞ்சல் சேவை பணியாளர்கள், 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இதுவரையில் அரச தரப்பு அதிகாரிகள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முன்வரவில்லையென அஞ்சல் பணியாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

IMG_594128ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) அனுசரணையில் காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் நேற்று (24.06.2017) காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினரால் கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 16 அணிகள் பங்குகொள்ளும், 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மேற்படி மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது நேற்று காரைதீவு கனகரெட்ணம் மைதானத்தில் மங்கள விளக்கேற்றலுடன் மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு அதிதிகளாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், விவேகானந்தா விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இப் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 15.07.2017அன்று இதே மைதானத்தில் இடம்பெறவுள்ளது. Read more

dfdசௌதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகள் தம் மீது விதித்துள்ள நிபந்தனைகள், நடைமுறை ரீதியாக செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு இல்லாதவை என்று கூறி கத்தார் அவற்றை நிராகரித்துள்ளது. கத்தார் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள 13 நிபந்தனைகளும் நியாமானதோ, நிறைவேற்ற சாத்தியமானதோ அல்ல என கூறி கத்தார் வெளியுறவு அமைச்சர் அவற்றை நிராகரித்திருக்கிறார்.

சௌதி அரேபியா மற்றும் அதன் நட்பு நாடுகளான எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைன் ஆகியவை கத்தார் மீது கடுமையான தடைகளை விதித்துள்ளன. பயங்கரவாதத்திற்கு கத்தார் ஆதரவு அளித்து வருவதாக அவை குற்றஞ்சாட்டி வருக்கின்றன. பிற நிபந்தனைகளோடு, கத்தார் அரசால் நிதி ஆதரவு வழங்கப்படும் அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடிவிட வேண்டுமென இந்த நாடுகள் நிபந்தனை வைத்துள்ளன. இந்த நாடுகள் “கருத்து சுதந்திரத்தை தடுக்க” முயல்வதாக அல் ஜசீரா தொலைக்காட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. Read more