Header image alt text

plote leederவடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான சுழற்சிமுறை தேசிய பட்டியல் ஆசனம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)க்கு உரியது என்று அக்கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
வடக்கு மாகாண சபைக்கு தேசிய பட்டியல் ஆசனங்கள் இரண்டு கிடைத்தன. அதில் ஒன்று முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர் என்ற ரீதியில் நிரந்தரமாக அஸ்மினுக்கு வழங்கப்பட்டது. அவர் நியமிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்றுவரையிலும் ஒரு தமிழரசுக்கட்சி அங்கத்தவராகவே இருந்து வருகின்றார். மற்றைய ஆசனம் சுழற்சிமுறையில் வழங்கப்பட்டு வந்தது. இவ் விடயம் அனைத்து கட்சி உறுப்பினர்களாலும் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Read more

Sri_Lankaஇலங்கையில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை என அரசாங்க புள்ளி விபர திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்கள் தொடர்பாக அந்த திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

இதன்படி கடந்த 2016 ம் ஆண்டு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டின் போது 5 முதல் 17 வயது வரை உள்ள பள்ளிக்கூடம் செல்லும் வயதில் உள்ள 4,52 661 மாணவர்கள் பாடசாலை செல்வதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more

UKபிரித்தானியாவில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகியிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது பற்றி, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்தவிருக்கும் பிரெக்ஸிட் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக தனது பெரும்பான்மையை அதிகரித்துக்கொள்ள தேர்தலை முன்கூட்டியே நடத்த உத்தரவிட்ட , பிரதமர் தெரீசா மே அவர் முயற்சியில் தோல்வியடைந்தார். Read more

CTBவவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை 10.15 மணியளவில் தனியார் மற்றும் இ.போ.ச ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், Read more

ankaone lanktwoowwதிருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் மூன்று தமிழ் மாணவிகள் பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவத்தையடுத்து அந்த பிரதேசத்தில் தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் ஓஸ்ரின் பெர்ணான்டோ இரு தரப்பு பிரதிநிதிகளையும் சந்தித்து ஆராய்ந்துள்ளார். Read more

northern_provincial_council1தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராஜா ஆகிய இருவரும் பதவிவிலக வேண்டும் என்று ஊழல், மோசடி தொடர்பில் விசாரிக்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழு பரிந்துரைத்த போதும் அந்த இருஅமைச்சர்களும் உடனடியாகப் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை என்று வடக்கு மாகாணசபை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் முதலமைச்சருக்கு நெருக்கடிஅதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Read more

cm-meet-with-euபுதிய அரசியலமைப்பில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாத நிலையில், பழைய நிலமையிலேயே இன்னும் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புரிமை கொண்ட 17 நாடுகளின் பிரதிநிதிகள் இன்று புதன்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். Read more

iranஇரானின் தலைநகர் தெஹ்ரானில் நடந்த இரு தாக்குதல்களில் பன்னிரெண்டு பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. நாடாளுமன்றத்திலும், இரானின் இஸ்லாமிய குடியரசின் நிறுவனரின் சமாதியிலும் தாக்குதல் நடந்துள்ளது.

பெண் வேடமணிந்த ஆயுததாரிகள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து சுட்டிருக்கிறார்கள். ஒரு தாக்குதலாளி தனது வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்ததாக இரான் கூறியுள்ளது. Read more

kathar01சௌதி அரேபியா உட்பட மத்திய கிழக்கின் ஆறு நாடுகள் கத்தாருடன் முரண்பட்டுள்ளமை அங்கு பணி புரியும் இலங்கையருக்கும், கத்தார்-இலங்கைக்கு இடையிலான ராஜிய உறவுகளுக்கும் தொடர்புடைய விஷயமல்ல என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கத்தார் ரியலை இலங்கை நாணயமாக மாற்றும் நடவடிக்கைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்றும். Read more

D.sithadthan MPநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது நாடாளுமன்றத்தினுடைய ஏழாவது அமர்வுகள் கடந்த வாரம், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் நடைபெற்றன. இந்த அமர்வினில் சிறப்பு அதிதியாகப் பங்கேற்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட்டினதும் அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், நேரடியாக அந்த அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாத சூழலில், அவர் காணொளி மூலம் உரையாற்றினார். அந்த உரை கீழே தரப்பட்டுள்ளது:

Read more