Header image alt text

kokuvil08கொக்குவில் தாவடி-வடக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள காந்தி கலை வளர்ச்சி மன்றத்தினரால் நடாத்தப்படும் சரஸ்வதிதேவி முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 07-08-2017 அன்று முன்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சிறப்புற இடம்பெற்றது. பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பிராந்திய முன்பள்ளி கல்வி பணிப்பாளர் திரு கிருபானந்தன் அவர்களும் கலந்துகொள்ள நிகழ்வுக்கு முன்னாள் யாழ் பல்கலைக் கழக பொருளியல்துறை பீடாதிபதி தேவராஐh அவர்கள் தலைமை வகித்திருந்தார். Read more

karaveddi09கரவெட்டி இராஜா கிராமத்தின் முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இளஞ்சுடர் விளையாட்டுக் கழகம் மற்றும்  இராஜாகிராம கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையுடன்  06-08-2017 அன்று இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கரவெட்டி பிரதேச முன்பள்ளி கல்வி உதவிப் பணிப்பாளர் சி. தில்லைநாதன் அவர்களும் சமுர்த்தி உத்தியோகஸ்தர் க. குகேந்திரன்; அவர்களும் கரவெட்டி கோட்ட முன்பள்ளி இணைப்பாளர் பா. கலைவாணி அவர்களும்  கௌரவ விருந்தினர்களாக கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு. காசியன் (ஜெயம்) மற்றும் இளஞ்சுடர் விளையாட்டுக் கழக தலைவர் திரு. கஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

alaveddy04அளவெட்டி மத்திய விளையாட்டுக் கழகம் நடாத்திய அமரர்கள்  லஜிதன், திருக்குமரன் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி அளவெட்டி மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் 05-08-2017 அன்று மின்னொளியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த. சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கௌரவ வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மகாஜன கல்லூரியின் அதிபர் ப.மணிசேகரன் அவர்களும் முன்னாள் வலி-வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் திரு. சஜீவன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

dfdகிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முட்கொம்பன் – செக்காலை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரம் வெட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கச் சென்ற வனவள அலுவலகர்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்களில் ஒருவரை மரம் அரியும் இயந்திரத்தினால் வெட்டியும் மேலும் சிலரை தாக்கிவிட்டும் சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவமானது வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. Read more

arrestedகுற்றச்செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். யாழ், கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடனும் இவர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். Read more

ammunition and armsகிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மலையாளபுரம் கிராத்தில் உள்ள வீட்டுக் கிணற்றில் இருந்து, நேற்று பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தியா – விழுபுரம் மாவட்ட ஈழ அகதிகள் முகாமில் இருந்து, கடந்த வருடம் நாடு திரும்பிய சின்னையா சுப்பிரமணியம் என்பர், தனது காணியில் உள்ள தோட்டக் கிணற்றைத் தூர் வாரிய போதே கிணற்றில் வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டுள்ளார். Read more

dfsdfdsபாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகளையும் யாழ் மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதற்காக இங்கிலாந்து தொடர்ந்து இலங்கையுடன் சேர்ந்து செயற்படும் என இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஆலிவர் கொல்வின் தெரிவித்தார். Read more

china high commissionerஇலங்கையை தாம் ஒருபோது பாதுகாப்புத் தளமாக பயன்படுத்தப்போவதில்லை என சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன Yi Xianliang கொழும்பு துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை குறிப்பிட்டார்.

இந்து சமுத்திரத்தில் சீனாவின் பாதுகாப்பை நிலை நிறுத்துவதற்கு இலங்கை பயன்படுத்தப்படமாட்டாது. Read more

IMG_5916ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இளைஞரணியின் ஒழுங்கமைப்பில் நெளுக்குளம் காத்தான் கோட்ட அமனா கழகத்தின் மாணவர்களுக்கு இன்று (05.08.2017) கழக மண்டபத்தில் வைத்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) இளைஞரணியின் வவுனியா மாவட்ட செயலாளர் ஸ்ரீகரன் கேசவன்(இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்)அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இவ் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) இளைஞரணி செயலாளர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது. Read more

1தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினதும் இளைஞர் பாராளுமன்றத்தின் ஊடான இளைஞர் கழகங்களின் சமூக அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழாக வழங்கப்பட்ட வவுனியா தோணிக்கல் இளங்கோ இளைஞர் கழகத்தின் குழாய் கிணறு மற்றும் மலசல கூட தொகுதிக்கான ஆரம்ப நிகழ்வு இளங்கோ இளைஞர் கழகத்தின் தலைவர் திரு நிதர்ஷன் தலைமையில் நேற்றையதினம் (04.08.2017) நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு சு.காண்டீபன், வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு ஆர்.சசிகரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் திரு ரவி, தீடீர் மரண விசாரணை அதிகாரி திரு லாசர் சுரேந்திரசேகரன், வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன முன்னாள் தலைவர் திரு தே.அமுதராஜ், மாவட்ட சம்மேளன உறுப்பினர் திரு நிபாத் ஆகியோருடன் கழகத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Read more