Header image alt text

indo lanka fishingஇந்திய கடற்றொழில் அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு இலங்கைக்கு வருகை தந்து 42 இந்திய இழுவை படகுகளை பார்வையிட்டுள்ளனர்.

2015.03.06ம் திகதி இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட 42 இந்திய இழுவை படகுகளை இலங்கை அரசாங்கம் அண்மையில் விடுவித்திருந்தது. இந்த படகுகள் தற்போது இந்தியாவுக்கு கொண்டு செல்லக்கூடிய நிலையில் உள்ளதா என்பதை ஆராய்வதற்காகவே மேற்படி 9பேர் கொண்ட குழு இலங்கை வருகை தந்திருந்தது. Read more

frontவவுனியாவில் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இளைஞரணியின் சார்பான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் நேற்று (17.08.2017) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) இளைஞரணியின் செயலாளர் திரு சு.காண்டீபன் தலைமையில் வவுனியா பாலமோட்டை பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்டு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இவ் வாழ்வாதார உதவி லண்டனில் வசிக்கும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) இளைஞரணி உறுப்பினர் திரு எ.முரளிதரனின் ஒழுங்கமைப்பில் அவரின் தந்தை அமரர் திரு.சுப்பிரமணியம் எதிர்வீரசிங்கம் ஐயா அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.
Read more

a1வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கும் வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கும் புத்தாடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்த்தினால் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளிகளுக்கு ரூபா 50,000 பெறுமதியான புத்தாடைகளும் வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல விசேட தேவைக்குரிய மாணவர்களின் நடனக்குழுவுக்கு ரூபா 30,000 பெறுமதியான புத்தாடைகளும் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன. Read more

sfdsfdஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் திரு. எஸ்.ஜெகநாதன் அவர்கள் (16.08.2017) முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிரதேசத்திற்கு சென்று அங்கு தமது சொந்த நிலத்தை மீட்கும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துள்ள மக்களை சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி, அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

அவருடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் பொருளாளரும், வட மாகாணசபை உறுப்பினருமான கந்தையா சிவநேசன், கட்சியின் செயற்குழு உறுப்பினர் க.தவராஜா மாஸ்டர் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

strevil chinnaiyaபுதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதியாக இருந்த ட்ரெவிஸ் சின்னையாவிற்கு, ஜனாதிபதியால் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ரியர் அட்மிரல் சின்னையா 1982ம் ஆண்டு கடற்படை சேவையில் இணைந்துக் கொண்டார். புலிகளுக்கு எதிராக யுத்தக் காலத்தில் செயற்பட்ட சிரேஷ்ட கடற்படை அதிகாரியாகவும் இவர் இருந்துள்ளார். இலங்கை கடற்படையின் சிரேஷ்ட உறுப்பினரான இவர், 21ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். Read more

ootrupulamகிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஊற்றுப்புலம் ஒடுக்குப் பாலம் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த ஊற்றுப்புலம் ஓடுக்கு பாலம் ஆயிரம் பாலம் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதோ அல்லது தற்போது ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டமோ அல்ல கடந்த சில வருடங்களுக்கு முன் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் முன்னைய அரசின் காலத்தில் குறித்த பாலம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. Read more

un trincoதிருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனை கிராமங்களில் மீளக்குடியேறிய மக்கள் தமது விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிக்குமாறும் விடுவித்தவற்றிக்கான முறையான ஆவணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி மனித உரிமைகள் ஆணைக்குளுவின் திருகோணமலை பிராந்திய செயலகத்தில் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனைக் கிராமத்தில் உள்ள 3 கிராம அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள் இணைந்து முறைப்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய செயலகத்தில் இன்றுகாலை 11.00 மணியளவில் கடிதங்களையும் அதற்கான பூரண ஆவணங்களையும் கையளித்துள்ளனர். Read more

sdfsdமுன்னாள் சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் போதி லியனகே, திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக கண்டி மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாடிப்படியில் இருந்து திடீரென விழுந்த நிலையில், கண்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், இரண்டு தினங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றையதினம் அதிகாலை அவர் உயிரிழந்ததாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார். Read more

chitamparamஇலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கின்றமை தொடர்பில், இந்தியாவின் காங்கிரஸ் கட்சி வருத்தம் வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் சுதந்திரதின உரையைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் இதனைத் தெரிவித்துள்ளார்

இந்தியா, தமது அண்டைய நாடுகளில் செல்வாக்கினை இழந்து வருகிறது. ரஷ்யா பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்குகிறது. நேபாளம் இந்தியாவிடம் இருந்து விலகிச் செயற்படுகிறது. இலங்கையில் சீனா துறைமுக நகரத்தை நிர்மாணித்து வருகிறது. Read more

sfdfdfdfயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமானது வன்னி பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டு தனியான பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கீழ் பிரயோக கணிதம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் நடத்திச் செல்லப்பட்ட வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம் பம்பைமடுவில் உள்ள வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த, நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறியுள்ளார். Read more