யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வயற் காணியொன்றில் இருந்து பெருமளவான பழைய மற்றும் புதிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து கிணற்றுக்குள் காணப்பட்ட ஆயுதங்களை மீட்டிருந்தனர்.

இவற்றில் ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படும் ரவைகள் ஒரு தொகையும், அவற்றோடு 60 மில்லி மீற்றர் நீளமான மோட்டார் குண்டுகள் சிலவும், ஆர்.பி.ஜீ குண்டு ஒன்றும் மற்றும் ரொக்கட் லோன்ஜர் வகை சார்ந்த குண்டுகளும் மீட்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.