போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தை உருவாக்க, தமது நாட்டின் அரசாங்கம் ஆதரவளிக்காது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் கெனிச்சி சுகுமா இதனை நேற்று தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச நீதித்துறையினரின் பங்களிப்புடன் விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஜெனீவா 2015 தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதற்கு ஜப்பானிய அரசாங்கம் ஆதரவளிக்காது. Read more
முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோட்டாபாய ராஜபக்சவை கைது செய்வதற்கு எதிரான தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்து, பாரிய நிதி மோசடி செய்துள்ளதாக கோட்டாபாய ராஜபக்ச மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
யாழ் மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த 5 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இருவருக்கும் நிபந்தனையுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது.
மூன்று மீனவர்களுடன் முல்லைத்தீவு நாயாறு கடற்பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போன கடற்றொழில் படகு தமிழக கடலூரில் மீட்கப்பட்டுள்ளது. இதனை தமிழக கடலோர பாதுகாப்பு காவற்துறை தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடத்தில் தங்கம் தேடி அகழ்வு நடவடிக்கை ஒன்று கடந்த 20ம் திகதி முன்னெடுக்கப்பட்டு, முடிவுறாத நிலையில் இன்று மீண்டும் தோண்டுவதற்கு திகதி குறிக்கப்பட்டிருந்தது.
யாழ். சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூடு நடாத்தி கொலை செய்து அவரது பிள்ளைகளைக் காயப்படுத்திவிட்டு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றத்துக்கு இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு மரணதண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. தானியங்கித் துப்பாக்கியைப் பயன்படுத்தியமைக்கு எதிரிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், கிளிநோச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் சபாநாயகர் கருஜயசூரியவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் பாகிஸ்தான் செல்லவுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.