வடக்கு மாகாண முதலமைச்சர் சீவீ.விக்னேஸ்வரனால் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்ட உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்தே இந்த உதவிகள் இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் வைத்து முதலமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டன. இதேவேளை வடக்கு முதலமைச்சரின் அலுவலகத்தில் வாராந்தம் நடைபெறும் பொதுமக்கள் சந்திப்பின்போது வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்கள் தமக்கான வீட்டுத் திட்ட உதவிகள் வழங்க வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைய அந்த மக்களது உண்மையான நிலைமைகளை ஆராய்ந்து முதலமைச்சர் செயலக அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கே ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.