Header image alt text

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த மொழிபெயர்ப்பு கற்கைகள் பாடநெறிக்கான தெரிவுப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சை இடம்பெறும் திகதி தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மயிலிட்டி 683 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஆயிரத்து 600 மில்லியன் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள மயிலிட்டியில் சுமார் 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. Read more

வவுனியா ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செட்டிகுளம் பகுதியில் 2ஆம் படிவத்தில் வசிக்கும் பாலசுந்தரம் நிரோசனே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் ஓமந்தைப் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞனின் கால் ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். Read more

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக அலைனா பி டெப்பிளிட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார்.

அவரது நியமனத்தை செனெட் அங்கீகரிக்கும் பட்சத்தில் அதுல் கெசாப்பிற்கு பின்னர் அலைனா டெப்பிளிட்ஸ் இலங்கை தூதுவராக பணியாற்றுவார். தற்போது நேபாளிற்கான அமெரிக்கத் தூதுவராக பணியாற்றும் அலைனா டெப்பிளிட்சையே டிரம்ப் இலங்கை தூதுவராக நியமித்துள்ளார். Read more

சட்டவிரோதமாக ஒரு தொகை ரூபாய்களை நாட்டிலிருந்து கொண்டு செல்ல முற்பட்ட இந்திய கணக்காய்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க வானுர்தி தள சுங்க தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெசினோ விளையாட்டு மூலம் பெற்றுக் கொண்ட 64 லட்சத்து 1840 ரூபாய்களை சுங்கத்திற்கு அறிவிக்காது இந்தியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பல தடவைகள் அவர் கெசினோ விளையாட்டின் மூலம் பணம் சம்பாதித்துள்ளதாக சுங்க பிரிவி தெரிவித்துள்ளது. Read more

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை நோக்கி அச்சுறுத்தும் விதத்தில் சைகை செய்து சர்ச்சையில் சிக்கிய பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கர பெர்ணான்டோ குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர் ஹைவெல் வில்லியம்ஸ் குறிப்பிட்ட விவகாரம் குறித்து மீண்டும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள பிரிட்டனின் ஆசிய விவகாரங்களிற்கான அமைச்சர் மார்க் பீல்ட் பொதுநலவாய மாநாட்டின்போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்து ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளார். Read more

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் எஸ்.அமல நாதன் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டம் அதிகளவான பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் 9831 குடும்பங்களைச் சேர்ந்த 42,053 பேர் பாதிப்படைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இராணுவமயமான ஆட்சி ஒன்றை மீண்டும் உருவாக இடமளிக்கமுடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா? இல்லது ராஜபக்ஷ ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த வேண்டுமா? என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். Read more

புதையல் தோன்றுவதற்கு முயற்சி செய்தவர்கள் எனும் சந்தேகத்தின்பேரில் ஏழு பேர் தர்மபுரம் பொலிஸாரால் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கல்மடுவில் உள்ள காணி ஒன்றில் பூஜை ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் மூவர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய நால்வரும் கொழும்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. Read more

கன்டர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்றுகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 62 வயதான, கோண்டாவில் நவரட்ணராஜா வீதியைச் சேர்ந்த சின்னத்துரை ராசரட்ணம் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் கோப்பாய் சந்தி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, பின்புறமாக வந்த கன்டர் வாகனம் மோதியுள்ளது. Read more