Header image alt text

சீரற்ற வானிலையின் காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் 6,255 குடும்பங்களைச் சேர்ந்த, 24,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை தங்கவைப்பதற்காக, 81 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மஹவௌ பகுதியில் 15 முகாம்களும், தங்கொட்டுவ பகுதியில் 1 முகாமும், ஆராச்சிக்கட்டுவ பகுதியில் 9 முகாம்களும், நாத்தாண்டிய பகுதியில் 39 முகாம்களும், சிலாபத்தில் 11 முகாம்களும், வென்னப்புவ பகுதியில் 5 முகாம்களும், கற்பிட்டி பிரதேசத்தில் 01 முகாமும் அமைக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகிறது. Read more

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் தரம் 7இல் கல்வி கற்கும் 12 வயது மாணவிகள் ஏழு பேரை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரொருவர் இன்று தெல்லிப்பளை காவற்துறையால் கைது செய்யப்பட்டார்.

குறித்த பாடசாலையின் கணித பாட ஆசிரியரான செல்வரத்தினம் சத்தியநாராணயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பல சந்தர்ப்பங்களில் குறித்த 7 மாணவிகளையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் இது தொடர்பில் எவருக்கும் தெரிவிக்கக் கூடாது என குறித்த மாணவிகளை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே பொதி சோதனையாளர்களின் பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்து ரயில்வே பொதி சோதனையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். Read more

முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநீசன் ஆவார்.

நேற்று மாலை முதல் மகனை காணாத குறித்த இளைஞரது தந்தை பல இடங்களிலும் தேடித் திரிந்துள்ளார். இந்நிலையில் செல்வபுரம் கள்ளுத்தவறணை பகுதியிலுள்ள பனங்கூடலுக்குள் மோட்டார் சைக்கிள் ஒன்று நெடு நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த சிலர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். Read more

தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் 1500 பேர் 2 வருட ஆசிரியர் பயிற்சியை நினைவு செய்து இம்மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் இணைந்து கொள்கின்றனர்.

2016, 2017 ஆம் கற்கை ஆண்டு ஆசிரியர் பயிற்சி கற்கை நெறிகளில் இணைந்து ஆசிரியர் பயிற்சியை பெற்றுக்கொண்ட இவர்கள் இரண்டு வருட பயிற்சியை நிறைவு செய்துகொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் இருந்து வெளியேறுகின்றனர். இவர்களில் 322 ஆசிரியர்கள் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்றவர்களாகும். Read more

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் சீரற்ற காலநிலையால் 18 மாவட்டங்களை சேர்ந்த 105,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடனான காலநிலை இன்றிரவு முதல் சற்று அதிகரிக்ககூடும் என்றும் கூறப்படுகின்றது. மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை எதிர்கொண்டுள்ள இயற்கை அனர்த்தத்துக்கு தயாராவதற்கும், உடனடியாக செயற்படுவதற்குமாக அவுஸ்ரேலிய அரசாங்கம், உலக உணவு வேலைத்திட்டம் மற்றும் யுனிசெப் அமைப்பு ஆகியன இணைந்து 89 மில்லியன் ரூபா நிதியை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

மூன்று வருட காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதோடு, இதற்கான உடன்படிக்கை சமீபத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் வெள்ளம், கடும்காற்று, வறட்சி முதலான இயற்கை அனர்த்தங்கள் எதிர்கொள்ளும் நாடுகளில் முக்கிய நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. Read more

பாடசாலைகளில் பணியாற்றும் கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை ஒன்றை அணிந்து செல்வதற்கான புதிய நடைமுறை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

கல்வியமைச்சர் தலைமையில் கல்வித் திணைக்களத்தில் இது தொடர்பான அங்குரார்பண நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வைத்தியர்களின் அறிவுரைகளுக்கமைய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு உடலுக்கு மிகவும் எளிமையான ஆடை ஒன்றை தமது கர்ப்ப காலத்தில் அணியும் சந்தர்ப்பம் இந்த புதிய திட்டத்தினால் வழங்கப்படுகிறது. Read more

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மே மாதம் 24, 25, 26, 27 மற்றும் ஜூன் மாதம் 02 ஆம் திகதிகளில் நடைபெற இருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், பிற்போடப்பட்ட பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டா 5 என்பன படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டில் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. Read more