உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக, பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ,
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டு மனு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இந்த மனுவை முழுமையான நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு, சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். Read more
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் நோக்கில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக ஆட்பதிவு திணைக்களம் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார்.
கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும்போது அறவிடப்படுகின்ற கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றது. சாதாரண சேவை கடவுச்சீட்டை பெறுவதற்காக இதுவரை அறவிடப்பட்ட மூவாயிரம் ரூபா இன்றுமுதல் மூவாயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.
ஹம்பாந்தோட்டை ரூவன்புர உபரத்ன பௌத்த மத்திய நிலையத்துக்கு முன்பாவிருந்த மூன்று அடி உயரமான புத்தர் சிலைக்கு, நேற்று இரவு, விஷமிகள் சேதம் விளைவித்துள்ளதாக, மத்திய நிலையத்தின் அதிகாரி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை. இவை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய விடயங்கள் கிடையாது.
வவுனியா ஓமந்தை பகுதியில் நேற்று பிற்பகல் 3.10மணியளவில் கார் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தியாவின் இரண்டாவது முறையாக மீண்டும் நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்றார். புதுடில்லியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற பதவியேற்பு விழாவில் பல நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மன்னார் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றி வரும் ரி.சரவணராஜா உடன் அமுலுக்கு வரும் வகையில் கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.