கைது செய்யப்பட்டுள்ள குருணாகலை போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பான விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நாளையதினம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட இந்த குழுவின் குறித்த அறிக்கை இன்றையதினம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் மேலும் சில விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டி இருப்பதால், நாளை வரையில் அதனை ஒத்திவைத்திருப்பதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார். Read more