இந்தியாவின் இரண்டாவது முறையாக மீண்டும் நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்றார். புதுடில்லியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற பதவியேற்பு விழாவில் பல நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்திய பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதாவின் எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக (பிரதமர்) நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். Read more
மன்னார் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றி வரும் ரி.சரவணராஜா உடன் அமுலுக்கு வரும் வகையில் கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள குருணாகலை போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பான விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நாளையதினம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்கள் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கையானது, எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதென, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அதிகம் பயன்படுத்திய 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவிலுள்ள தேசிய விசாரணை முகவரான, என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 20 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் குறித்த நபர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்டபோது அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபியின் வீடு, பாதுகாப்பு தரப்பினரால் நேற்று சோதனையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டுக்காக கல்வியல் கல்லூரிக்கு பயிலுனர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு, பாடசாலை, அரச நிறுவனங்கள் மற்றும் பிரசித்தமான இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடைசெய்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.