Header image alt text

இந்தியாவின், மத்திய அரசாங்கம் விடுதலை புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடித்துள்ளது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் உள்துறை அமைச்சகம் நீடித்துள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் தடுக்க தடை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பிரிவு, வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் குளியாப்பிட்டிய, பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தபட்ட பொலிஸ் ஊரடங்கு, பின்னர் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையையடுத்து வடமேல் மாகாணம், கம்பஹா மாவட்டம் என ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், பின்னர் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு நேற்று இரவு 9 மணியிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்தனர். Read more

கொச்சிக்கடை, சென். அந்தோனி தேவாலயத்திற்கு தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள வந்த நபர் கிங்ஸ்பெரி ஹோட்டல் மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட நபரிற்கு சொந்தமான வேன் ஒன்றிலேயே வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த வேன் கிங்ஸ்பெரி ஹோட்டல் மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட மொஹம் அசாம் மொஹமட் முபாரக்கின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வேன் வெடிபொருள் பொருத்தப்பட்ட நிலையில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. Read more

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி நேற்று இராணுவ தளபதியை இராணுவ தளபதியின் பணிமனையில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இலங்கை இராணுவ அதிகாரிகளுக்காக அவுஸ்திரேலியாவில் வழங்கப்படக்கூடிய பயிற்சிகள் மற்றும் பங்களிப்புகள் தொடர்பான சாத்தியக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. Read more

அரச பாடசாலைகளின் கனிஷ்ட மாணவர்களுக்கான 2ம் தவணை இன்று ஆரம்பித்த போதிலும், மாணவர்களின் வருகை குறைந்த அளவிலேயே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து, பாடசாலைகளின் செயற்பாடுகள் ஒத்திவைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தரம் 6 முதல் தரம் 13ம் வரையான மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன. எனினும் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சிறந்த முறையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 9 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மறு அறிவித்தல் வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் வட மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்றுமாலை தெரிவித்திருந்தார். Read more

புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் அம்பாறை காரைதீவு பாடசாலைப் பிள்ளைகள் ஐவருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. காரைதீவு ஆர்.கே.எம் பெண்கள் பாடசாலையின் செல்வராசா யனுசா (தரம் 8), விஜயபாகு லுக்ஷாந்தி (தரம் 8), தேவராஜா மிதுஷா (தரம் 7) மற்றும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் ரதீஸ்வரன் கிஜேந்தன் (தரம் 8) மனோகரன் சினோஜன் (தரம் 6) ஆகியோர்க்கு

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. வி.ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தை அமரர் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவாக வழங்கிய நிதியில் இவை வழங்கப்பட்டன. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான ம.சிவநேசன் (பக்தன்) அவர்கள் கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.
Read more

குளியாபிட்டி – ஹெட்டிபொல – பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய பிரதேசங்களுக்கும் நாளை அதிகாலை 4 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை ரஸ்நாயக்கபுர மற்றும் கொபேய்கனே ஆகிய காவல்துறை பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

தடை செய்யப்பட்டிருக்கும் முகத்தை முழுவதுமாக மறைக்கும் விதத்திலான ஆடையை அணிந்து இறுதிச் சடங்கில் பங்குபற்றியிருந்த தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் ஜயபிம பிரதேசத்தில் வைத்து இறுதிச் சடங்கொன்றில் கலந்துகொண்டிருந்த பெண்ணொருவர் முகத்தை முழுவதுமாக மறைத்தவாறு தனது கணவருடன் வருகைதந்துள்ளார். எனினும், இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த சிலர் குறித்த ஆடையை மாற்றிவிட்டு வருமாறு அறிவுறித்தியுள்ளனர். எனினும், அவர் மறுத்தமையால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. Read more

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா நோக்கி பயணித்துள்ளதன் காரணமாக இவ்வாறு ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.