பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த மனு இன்று நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. Read more
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிக்காதிருப்பதற்கு ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதுவ பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து முதுவாடிய பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது, வலப்பனையிலிருந்து சீதுவ நோக்கி பயணஞ்செய்த லொரியொன்றை வழிமறித்து சோதனையிட்ட போது, அதனுள்ளிருந்து 1,116 இராணுவ சீருடைகளை ஒத்த உடைகள் காணப்பட்டதாப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மாலிகாவத்தை – கெத்தாராமை விளையாட்டரங்குக்கு அருகாமையில் பள்ளிவாயிலின் அருகில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து 46 வாள்களும், துப்பாக்கி ரவைகள் ஒரு தொகையும், துப்பாக்கியொன்றும் உள்ளடங்கலாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவற்றுக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இரண்டாம் தவணைப் பாடசாலை இன்று ஆரம்பமான போதிலும் மாணவர்களின் வரவு பெரிதும் குறைந்த நிலையிலையே காணப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து, 600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவை மேற்கொள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கிராம எழுச்சித் திட்டத்தின்கீழ் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து சுன்னாகம் மகாகாளி அம்பாள் கோவில் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றையதினம் இடம்பெற்றது. 
கிராம எழுச்சித் திட்டத்தின்கீழ் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியொதுக்கீட்டின்கீழ் அச்செழு அன்னமார் சமேத நாகபுசணி தேவஸ்தானத்தின் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றையதினம் இடம்பெற்றது.
கிராம எழுச்சித் திட்டத்தின்கீழ் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியொதுக்கீட்டின்கீழ் அச்சுவேலி தெற்கு பைத்தோலை கிளைவீதிகளின் புனரமைப்புப் பணிகள் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன.