கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக, இன்று 16 தாய்மார் முறைபாடு செய்ததாக, குருநாகல் போதனா வைத்தியசாலையின் நிறைவேற்றதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குருநாகல், வாரியபொல, கலேவல, தம்புளை, மாவத்தகம, மெல்சிறிபுர ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே முறைபாடு செய்துள்ளனர். இதேவேளை நேற்று வாரியபொல, குருநாகல் ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு தாய்மார் குறித்த வைத்தியருக்கு எதிராக முறைபாடு செய்திருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more
ஹோமாகம தேசிய வைத்தியசாலையில் பணிப்புரியும் வைத்தியரொருவரை, அவர் அணிந்துவந்திருந்த புர்காவை கழற்றும்படி பணித்தமையின் காரணமாக, தனது வைத்தியர் தொழிலை இராஜினாமா செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, இந்தியாவின் பிரதமராக, இரண்டாவது முறையாக, நரேந்திர மோடி, எதிர்வரும் 30ம் தேதி பதவியேற்கவுள்ளார்.
இரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 8.45 மணியளவில் இரணைமடு புகையிரதக் கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள், பிரித்தானியா மற்றும் பிரான்ஸில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுக்கு இணையானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நாரஹேன்பிட்டியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது, வீடொன்றிலிருந்து இராணுவத்தினர் பயன்படுத்தும் முகமூடிகள் நான்கும்,
சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தி வேலைகளைச் செய்வதற்காகவும் சென்ற செம்மலை கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு பொலிசாரினாலும் அடாத்தாக விகாரை அமைத்துள்ள பிக்குவினாலும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிலாபம் மாதம்பே உள்ள பாடசாலையொன்றின் அலுவலகத்திலிருந்து தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரின் இலங்கைத் தலைவரும், இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரானின் விரிவுரைகள் அடங்கிய மடிக்கணினியொன்றும், 135 இறுவட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
தர்கா டவுன் பிரேக்கிங் நியுஸ்’ என்ற பெயரில் 100 உறுப்பினர்களைக் கொண்ட வட்ஸ்அப் குழு ஒன்றின் உருவாக்குனரும் மேலுமிரு சந்தேகநபர்களும் அளுத்கம பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பூநகரிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் 26 வருடங்களின் பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் மீள்குடியேறினர்.