பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் 42 வயதுடைய செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை கூறியுள்ளார். குறித்த வைத்தியரின் சொத்து விபரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் மோசடியான முறையில் சொத்து சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு குருணாகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். Read more
சட்டவிரோதமான முறையில் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு குடிபெயர முயற்சித்த 41 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு தெற்கு ஆழ் கடற்பரப்பில் 715 கடல் மைல் தொலைவில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கன்னியா நிலாவெளி வீதியில் வள்ளுவர்கோட்டம் பிரதேசத்தில் புராதன மயானம் கண்டுபிடிக்கப்பட்டதாக திருகோணமலை தொல்பொருள் தினைக்கள அதிகாரி சுமனதாச தெரிவித்துள்ளார்.
பிலியந்தலை, ஹெடிகம பிரதேசத்தில் வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஒன்றை நிறுத்தி பரிசோதனை செய்தபோது துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தொடர்பில் சிங்களப் பத்திரியொன்று சர்ச்சைக்குரிய செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையில், குறித்த வைத்தியரை பொலிஸார் நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கொழும்பில் வாழும் 50 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அகற்றி, அப் பகுதிகள் வர்த்தக நடவடிக்கைகக்கு வழங்கப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தெடார்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுபலசேனாவின் பௌத்தமதகுரு ஞானசாரதேரரிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதன் காரணமாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் குடும்பத்தவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ஊடகவியலாளரின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டம் பதுரலிய-திக்ஹேன கனிஷ்ட வித்தியாலயத்துக்கு அருகாமையிலிருந்து, 13 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக, பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.