gotabayaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிஷங்க சேனாதிபதி மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் உள்ளிட்ட எழுவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

எவன்காட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காவே அவர்கள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ, நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட எழுவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.