இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று இந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கை வந்துள்ளார். இதேவேளை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று மதியம் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுச் சென்றனர். இந்த விஜயத்தின்போது இருதரப்பு சுதந்தர வர்த்தக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.