கிளிநொச்சி பளை தர்மங்கேணி பகுதியில் 278ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மூன்று பெண்களும், இரண்டு ஆண்களுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து மத்துகம நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் பயணித்த வேன் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. Read more


