thissa-aththanayakeஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி அவரை எதிர்வரும் 19ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சரான இவருக்கு எதிராக சட்டமா அதிபரால் கடந்த 9ம் திகதி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது, போலி ஆவணங்களை வெளியிட்டமை, உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.