dsc04948முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளிச் சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி மாகாணக் கல்வியமைச்சினால் மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் நடாத்தப்பட்டது.

மேற்படி நிகழ்வில் அதிதிகளாக வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், முன்பள்ளிகளின் மாகாணப் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், பங்குத்தந்தை, துணுக்காய், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின. இறுதியில் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. மேற்படி விளையாட்டு நிகழ்வில் முன்பள்ளிகளின் ஆசிரியர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

dsc04945 dsc04946 dsc04947 dsc04949 dsc04953 dsc04954 dsc04980 dsc04982 dsc04984 dsc04989 dsc05000 dsc05002 dsc05007 dsc05010 dsc05011 dsc05014 dsc05018