sdfdsபாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் இந்தியா இன்று அதிகாலை விமான தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் பாகிஸ்தான் தீவிரவாத முகாமைச் சேர்ந்த 2பேர் கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சக செய்திகள் தெரிவித்துள்ளன. யூரி தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 17பேர் பலியானார்கள். அப்பொழுது கண்டனம் தெரிவித்து வந்த இந்தியா பாகிஸ்தானை சர்வதேச சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தவே முயற்சிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் நேற்று நள்ளிரவில் அத்துமீறி இந்திய நிலைகள்மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள்மீது விமானப்படை தாக்குதலை தொடங்கியுள்ளது. இதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், 2தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாகிஸ்தான் மீதான தாக்குல்களுக்கு பதிலடி தொடர்வதற்கு பிரதமர் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீஃப் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல்கள் இந்திய எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன். இரு நாடுகளுக்கிடையிலும் போர் மூளும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.