Header image alt text

Iththaavil1கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இத்தாவில் கிராமத்திற்கு (03.09.2016) சனிக்கிழமை விஜயம் செய்திருந்த புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அப்பகுதி மக்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது அம்மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்ததோடு, தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார். இச்சந்திப்பில் ஊர்ப் பெரியோர்கள், மாதர் சங்கங்கள் மற்றும் முன்பள்ளிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அன்றையதினம் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வேம்பொடுகேணி கிராமத்திற்கு விஜயம் செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், பிரதேச மாதர் சங்கங்கள் மற்றும் முன்பள்ளிகளின் முக்கியஸ்தர்களையும், ஊர்ப் பெரியோர்களையும் சந்தித்து குறைநிறைகளைக் கேட்டறிந்ததோடு, தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் விளக்கியுள்ளார். Read more

சட்டத்தரணிக்கு எதிரான பிடியாணையை இடைநிறுத்த நீதிபதி இளஞ்செழியன் மறுப்பு-

ilanchliyanசட்டத்தரணி ஒருவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்திக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, யாழ் மேல் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்துள்ளார். அத்துடன், அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அவர் தள்ளுபடி செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்குப் பணிந்து முதலில் அதனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து, சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக தெல்லிப்பழை பொலிசாரினால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி கடந்த 2ம் திகதி அந்த சட்டத்தரணிக்கு எதிராக மல்லாகம் நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்தப் பிடியாணையை இடைநிறுத்தி வைப்பதற்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, சந்தேகநபரான சட்டத்தரணி ஊடாக யாழ் மேல்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவைப் பரிசீலனை செய்த நீதிபதி இளஞ்செழியன் அது தொடர்பாக செய்யப்பட்ட சமர்ப்பணத்தை நிராகரித்து, மனுவை தள்ளுபடி செய்தார். அத்துடன் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு முதலில் பணிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார்.

மலேசியாவிற்கான இலங்கைத் உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை தொடர்பில் கண்டனம்-

sssssssssssமலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சர்மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் கண்டனம் வெளியிட்டு, மலேஷிய உயர்ஸ்தானிகருக்கு இலங்கை வெளிவிவகார செயலாளர் சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது. மாநாடு ஒன்றுக்காக மலேஷியா சென்றிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்த நாட்டிலுள்ள தமிழர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்றையதினம் மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சர் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை மலேஷியாவிலுள்ள தமிழ் டயஸ்போரா குழுவினருக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்றுகாலை அரை மணிநேரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, விமான நிலைய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மலேஷியாவில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்க சென்ற குழுவினரே இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள மலேஷியாவுக்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்த நாட்டிலுள்ள தமிழர்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றையதினம் மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அந்த நாட்டு விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இலங்கைத் தூதுவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளை வாசிக்க… Read more

திருகோணமலை களப்புக்கடலில் ஆயுதங்கள் மீட்பு-

armsதிருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னைமரவாடி பகுதியிலுள்ள களப்புக் கடலில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பொலிஸாரின் உதவியுடன் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கடல் பகுதியில் உள்ள இடமொன்றில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் சிக்கிய ஆயுதங்கள் மீட்கப்பட்டன. மீனவர்களின் வலையில் தொடர்ந்தும் ஆயுதங்கள் சிக்குவதினால் நேற்று கடற்பகுதியில் தேடுதல் நடாத்திய போது ரி56 ரக துப்பாக்கி, கைக்குண்டுள் -02 மற்றும் துப்பாக்கி ரவைகள் 535, புகைக்குண்டு 01, துப்பாக்கி பாகங்கள் போன்றனவும் மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் கூறியுள்ளனர். இதனையடுத்து தொடர்ந்தும் கடற்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

கிளிநொச்சியில் கைதிகள் தினத்தை முன்னிட்டு அடையாள உண்ணாவிரதம்-

dsdddகிளிநொச்சியில் கைதிகள் தினத்தை முன்னிட்டு அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வலி.வடக்கு மீள்குடியமர்வுக்கு 3 மாதகால அவகாசம் தவறின் அத்துமீறிய மீள்குடியேற்றம்-

vali north landவலி.வடக்கில் தமது சொந்த நிலங்களில் மக்களை மீள்குடியேற அனுமதிக்காவிடின் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அவர்கள் மீள்குடியேறுவார்கள் என வலி.வடக்கு மீள்குடியேற்ற ஒன்றியம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வலி.வடக்கு மீள்குடியேற்ற ஒன்றியமும் இணைந்து யாழ்பாடி விருந்தினர் விடுதியில் செய்தியாளர் சந்திப்பை நடாத்தியபோதே மேற்கண்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் ஒன்றியப் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்ததாவது, கடந்த டிசம்பர் மாதம் நலன்புரி முகாமுக்கு வருகைதந்த ஜனாதிபதி வலிவடக்கு மக்களை 6மாத காலத்திற்குள் மீள்குடியேற்றம் செய்வேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தற்போது ஐந்து இடங்களை கையளிக்கமுடியாது எனக் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி-(படங்கள் இணைப்பு)-

P1390429அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்றுக்காலை (02.09.2016) யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது. இதன்போது மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நினைவுக் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று முற்பகல் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், கல்லூரியின் பீடாதிபதி அமிர்தலிங்கம், முன்னைநாள் கிராம சேவையாளர் ஞானசபேசன் மற்றும் கல்லூரி மாணவர்கள் சார்பில் ஒருவர் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தார்கள். இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் கல்லூரியின் பீடாதிபதி திரு. அமிர்தலிங்கம் ஆகியோர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்கள். Read more

தமிழ் மக்களுக்கு பாதகமான எந்த ஒரு தீர்வையும் ஏற்கபோவதில்லை-இரா.சம்பந்தன்-

sfdfdf (9)”தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையும் எந்த ஒரு தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம். எமது மக்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்கும் வரையில் மக்கள் பொறுமையாக இருக்கும் அதேவேளையில், கொள்கையில் உறுதியுடன் இருக்கவேண்டும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்றுக்காலை தாவடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘தர்மலிங்கத்தின் கருத்துக்களின் அடிப்படையிலேயே தந்தை செல்வா தமது கொள்கைகளை வகுத்தார். எமது அரசியல் பயணத்தில் ஏற்பட்ட ஒழுங்குமுறைகளை அனைவரும் அறியவேண்டும். அந்தவகையில் நாடு பிளவுபடாத ஒரு தீர்வு எமக்கு வேண்டும் என நாம் கோருகிறோம். இறைமை அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிஷா பிஸ்வால் சிங்கப்பூரில் சந்திப்பு-

ranil nisha metசிங்கப்பூரில் இடம்பெறுகின்ற இந்து சமுத்திர மாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை வெளிவிவகாரச் செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேசியுள்ளார். இதன்போது, தற்போதைய அரசியல் நிலமை, பொருளாதார மற்றும் சமூக நிலைப்பாடுகள் சம்பந்தமாக பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. கண்டி – கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை பொரளாதார வலயத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை அண்மித்த அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இங்கு பேசப்பட்டுள்ளது. அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் வாழ்க்கையை சுமுகநிலைக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நீண்டகால மற்றும் நிலையான வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் இருவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் தற்போதுள்ள இணக்க அரசின் நல்லாட்சிக்கு நிஷா பிஸ்வால் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை மக்களின் சிறப்பு மற்றும் நன்மைக்காக ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக மெரிக்க வெளியுறவுத் துறை துணை வெளிவிவகாரச் செயலர் நிஷா பிஸ்வால் கூறினார் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் ரயில் தடம்புரண்டு விபத்து-

kksயாழ். ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த உத்தரதேவி கடுகதி ரயில் இன்று அதிகாலை 5.30; மணியளவில் காங்கேசன்துறையில் தண்டவாளத்தை விட்டு விலகி வீதியில் பயணித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்றிருந்த குறித்த புகையிரதம் இன்றுகாலை 6.30மணிக்கு அங்கிருந்து கொழும்பு நோக்கி புறப்படுவதற்காக காங்கேசன்துறையிலிருந்து யாழ். ரயில் நிலையத்திற்கு 5.30 அளவில் பயணித்தபோதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. புகையிரதத்தின் கட்டுப்பாட்டு கருவி (பிரேக்) செயலிழந்தமையே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றது. இதேவேளை சம்பவத்தில் யாருக்கும் பாதிப்புக்கள் இடம்பெறவில்லை எனவும், விபத்து குறித்த விசாரணைகளை புகையிரத திணைக்களம் ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்நிலையில் குறித்த விபத்தின் காரணமாக சுன்னாகம் ரயில் நிலையம் வரையில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விபத்திற்குள்ளான ரயிலின் பெட்டிகளை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா பொதுச்செயலர் பான்கீ மூன் சந்திப்பு-

dsfdfdfdதமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான்கீ மூனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் 2.30அளவில் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், எஸ்.யோகேஸ்வரன், சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது இன்றைக்கு மக்கள் நேரடியாக முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளான காணிப்பிரச்சினை, புத்த கோயில்கள் அமைப்பு, சிறைக்கைதிகளின் விடுதலை, காணாமற்போனோர் விடயம் ஆகியவை சம்பந்தமாக அரசாங்கம் கடந்த காலங்களில் பல உறுதிமொழிகளை வழங்கிய போதிலும், இதுவரையில் அவற்றில் எதையுமே செய்யவில்லை என்றும், எனவே இவ்விடயத்தினை தாங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும், அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்றும், ஒரு சரியான அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் எங்களுடைய பகுதிகளில் அமைதியைப் பேணமுடியாது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் அவர்கள் சுட்டிக்காட்டினார். Read more

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 31வது நினைவுதினம் அனுஸ்டிப்பு-(படங்கள் இணைப்பு)-

sfdfdf (9)இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2016) காலை 7மணியளவில் திரு. திருஞானசம்பந்தர் அவர்களது தலைமையில் நடைபெற்றது. 31வது நினைவுதின நிகழ்வுகள் யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது. இதன்போது மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நினைவுக் கூட்டமும் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் பேராசிரியர் சிற்றம்பலம், வட மாகாண எதிர்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் க.சிவநேசன், பா.கஜதீபன், வலிமேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், பெருமளவு பொதுமக்களும் கலந்து சிற்ப்பித்திருந்தனர். Read more

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களால் இடைக்காடு புதிய கரப்பந்தாட்ட மைதானம் திறந்துவைப்பு-(படங்கள் இணைப்பு)-

IMG_4601இடைக்காடு நம்பிக்கை நிதியத்தினால் யாழ். வடமராட்சி இடைக்காடு ஐக்கிய விளையாட்டுக் கழகத்திற்காக உருவாக்கப்பட்ட புதிய கரப்பந்தாட்ட மைதானம் 30.08.2016 செவ்வாய்க்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு புதிய கரப்பந்தாட்ட மைதானத்தினை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. ஜயசிங்க, கோட்டக்கல்வி அதிகாரி திரு. கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இடைக்காட்டு நம்பிக்கை நிதியத்தின் தலைவர் அரசகேசரி(அதிபர்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். Read more

ஐ.நா பொதுச்செயலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், வடக்கு முதல்வர் சந்திப்பு-

ban ki moonஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று பகல் யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்தார். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த ஐ.நா பொதுச்செயலர் முதலில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்தார். பின்னர் யாழ் பொதுநூலகத்தில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு பிரதிநிதிகளையும், வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனையும் தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பையடுத்து ஐ.நா செயலாளர் நாயகம் வலிகாமம் முகாமிற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார். இதேவேளை பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெருமளவிலான மக்கள் யாழ். பொதுநூலகத்தை சூழவுள்ள பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றிருந்தது. காணாமற் போனோரின் உறவினர்கள், வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளோர் உள்ளிட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். காணாமற் போனவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தியும் வலிவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மயிலிட்டி உட்பட்ட காணிகளில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஐ.நா பொதுச்செயலர் பான்கீ மூன் சபாநாயகர் சந்திப்பு-

sfdfdஇலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலரை இன்றுகாலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இன்று காலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் பாராளுமன்ற அவைத் தலைவர் லக்ஷமன் கிரியெல்ல, அரசியல் கட்சிகள், பாராளுமன்ற பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, பாராளுமன்ற அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்து அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா, ஈ.சரவணபவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். சமீபத்திய காலத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலங்கள், பாராளுமன்றத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழு போன்றன தொடர்பில் இலங்கை குழுவினர் எடுத்துக் கூறியுள்ளனர். குறுகிய காலத்திற்குள் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள வேலைத் திட்டங்களை செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாராட்டியுள்ளார். இதேவேளை ஐ.நா பொதுச்செயலர் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தார்.

இராணுவம் குறைக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்த்தப்படவேண்டும்-ஐ.நா பொதுச்செயலர்-

ban ki moonவடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள இராணுவம் குறைக்கப்பட்டு இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு நிலையான சமாதானம் தொடர்பில் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் இன, மத, அரசியல் கருத்துகள், உட்பட்ட வேறுபாடுகளைக் களைந்து இன நல்லிணக்கத்தையும், மனித உரிமையின் மதிப்பினையும் ஏற்படுத்துவதற்கு இலங்கையர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது. யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்கள் அவர்களின் சொந்த நிலங்களுக்குச் செல்ல வேண்டும். மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் குடிகொண்டுள்ள இராணுவம் குறைக்கப்பட்டு மக்களின் மீள்குடியேற்றம் நடைபெறவேண்டும். இத்தகைய செயற்பாடுகளே மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியேழுப்பும் என ஐ.நா செயலர் மேலும் தெரிவித்துள்ளார்.

உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக அதேயிடத்தில் புதிய புத்தர் சிலை-

sdsssddவவுனியா கனகராயன்குளம் பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலையொன்று சிங்கள தேசிய அமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் அறம்பொல ரத்தனசார தேரரின் தலைமையில் வைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், அனுராதபுரத்தில் புதிய புத்தர் சிலையொன்றைப் பெற்று அதனை எடுத்துச்சென்று அங்கு பிரதிஸ்டை செய்ததாக அறம்பொல ரத்தனசார தேரர் தெரிவித்துள்ளார். இவாஞ்சலிக் ஈழ விடுதலை அமைப்பு என்ற அமைப்பினரே கனகராயன்குளம் புத்தர் சிலையை உடைத்ததாக அறம்பொல ரத்தனசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, இவாஞ்சலிக் ஈழ விடுதலை அமைப்பு என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தனக்கு உயிரச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அகில இலங்கை இந்து சம்மேளனம் என்ற அமைப்பின் தலைவர் என்.அருண்காந்த் தெரிவித்துள்ளார். உடைக்கப்பட்ட புத்தர் சிலையை மீள நிறுவுவதற்கோ அல்லது இந்து பௌத்த மதங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கோ முயற்சித்தால் தனக்கு துப்பாக்கிச் சூடு விழும் என்று அந்த நபர் அச்சுறுத்தல் விடுத்ததாக அருண்காந்த் கூறியுள்ளார். Read more