Header image alt text

ranilஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நியூசிலாந்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

accidentதிருகோணமலை, கிண்ணியாப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டலடியூற்றுப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன், 9 பேர் காயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியிலிருந்து திருகோணமலை நகர் நோக்கி மீன் ஏற்றிக்கொண்டு பயணித்த வடி ரக வானும் ஆலங்கேணிப் பகுதியிலிருந்து கண்டல்காட்டுப் பகுதிக்குச் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

dsssஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரசாங்க வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு சென்ற அவர் அங்கு வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

election.....2016 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புகளில் தமது பெயர்களை பதிவு செய்வதற்காக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.

இதனால் தமது பெயர்களை பதிவு செய்யாத வாக்காளர்கள் இன்றைக்குள் பதிவு செய்யுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர்களின் நலன்கருதி இன்றைய தினம் நாடெங்கிலும் உள்ள மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்கள் நள்ளிரவு 12 மணிவரை திறந்திருக்கும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் மொஹமட் கூறியுள்ளார்.

p1400297தீர்வு நோக்கிய பயணத்திற்கு எழுக தமிழ் வலுச்சேர்க்கும், கேட்டால் தான் எதனையும் பெறமுடியும் என்கிறார் புளொட் தலைவர் சித்தார்த்தன் எம்.பி- 

எழுக தமிழ் எழுச்சி பேரணியானது நீடித்த நிரந்தரமான அரசியல் தீர்வு நோக்கிய பயணத்திற்கு வலுச்சேர்ப்பதாகவே அமையும் என தெரிவித்த புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், எமது உரிமைகளை கேட்பதில் எந்த தவறுமில்லை. கேட்டால் தான் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழில் நடைபெற்ற எழுக தமிழ் எழுச்சி பேரணி தொடர்பில் தென்னிலங்கை கொண்டிருக்கும் நிலைப்பாடு மற்றும் தற்போதைய நிலைமைகளை அப்பேரணி பாதிக்குமா என்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
Read more

dsc04782முல்லைத்தீவு மாவட்ட கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தினூடாக ஒரு நடமாடும் கால்நடை வைத்திய சேவை உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், டொக்டர் சிவமோகன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், வலயக் கல்விப் பணிப்பாளர் முனீஸ்வரன், கால்நடை அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளர், கால்நடை அபிவிருத்தித் திணைக்கள மாவட்ட ஆணையாளர், கால்நடை வைத்தியர்கள், அதிகாரிகள், பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
Read more

anurathapuram-jailதமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து, கடந்த ஒருவாரமாக முன்னெடுத்திருந்த தொடர் உண்ணாவிரதத்தை அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று கைவிட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் நீதியமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும், தமது வழக்குகளை தமிழ் பிரதேச நீதிமன்ற வரம்பிற்குள் மாற்றுமாறும் கோரிக்கை விடுத்து அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 21ஆம் திகதிமுதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். Read more

courts1998ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், அச்சுவேலியிலிருந்த இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர்கள் சிலர், பொதுமக்கள் இருவரை சுட்டுப் படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த இராணுவ வீரர்கள் 11 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன், நேற்று உத்தரவிட்டார்.

அந்த 11 பேரையும் எதிர்வரும் 10ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்டு, அவர் இப் பிடியாணையை பிறப்பித்துள்ளார். இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய இராணுவவீரர்கள் ஐவரையும் எதிர்வரும் 10ஆம்திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு, யாழ். நீதவான் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more

maithripalaமாகாண சபைகளின் உறுப்பினர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் அரச திறைசேரியில் அனுமதி பெற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக, ஜனாதிபதி ஊடக அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் மாதங்களில் வெளிநாடுகளுக்கு கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளும் மாகாண சபை உறுப்பினர்களும், அதுகுறித்து திறைசேரிக்கு அறிவிக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். Read more

mahindananthaவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முறையற்ற விதத்தில் நிதி திரட்டியமை மற்றும் அந்த நிதியைப் பயன்படுத்தி சொத்துக்களை கொள்வனவு செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. Read more