seeniyamottaiஇராணுவத் தலைமையகம் அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் நேற்று ஆரம்பித்த போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. சீனியாமோட்டை, சூரிபுரம், கேப்பாப்பிலவு ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 128 குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள சுமார் 530 ஏக்கர் காணியை விடுவிக்கக்கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, புதுக்குடியிருப்பு இராணுவமுகாம் அமைந்துள்ள 19 ஏக்கர் நிலப்பரப்பு மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் கூறியுள்ளார். இதில் முதற்கட்டமாக 7 ஏக்கர் காணியை எதிர்வரும் 4ஆம் திகதி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 20 குடும்பங்கள் அன்று சொந்த இடங்களுக்கு செல்ல முடியும் எனவும் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் 28ஆவது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.