Header image alt text

fsfdவடக்கு மாகாண ஆளுநருடன் எதிர்வரும் 13ஆம் திகதி வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபைக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வேலையிலாப் பட்டதாரிகளுக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பேரவை செயலகத்தில் நடைபெற்றது. இதில் மாகாண சபையும் ஆளுநரும் இணைந்து செயற்பட்டால் தான் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வினை பெறமுடியும் என மாகாண சபை உறுப்பினர்கள் போராட்டக்கார்களுக்கு தெளிவுபடுத்திய நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள் ஆளுநரை சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். எனினும் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் பட்டதாரிகள் அறிவித்துள்ளனர்.

gfgfகிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 18வது நாளாகவும் தொடர்கின்றது.

குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். எமது உறவுகளுக்கு இன்னும் பதிலளிக்காது இந்த அரசு பாராமுகமாக இருக்கின்றது அந்த மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

websiteஇலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான வழிகாட்டல்கள் அடங்கிய இணையத்தளம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் அதிகார சபை மற்றும் இலங்கை தகவல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் ஆகியன இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

விஷேடமாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான முக்கிய தகவல்களை இந்த இணையத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

airport (2)பிரான்ஸில் இருந்து நேற்றுமாலை நாடு திரும்பிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தந்தையும் மகளும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இருவரும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர் கடந்த 25 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பில் இருந்து வெளிநாடு சென்றிருந்த அ .தியாகராஜா வயது 52 மற்றும் அவரது மகளான தி.ஜனனி வயது 24 ஆகிய இருவருமே இவ்வாறு நேற்றுமாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

policeமிக நீண்ட பெயர்கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், இலங்கையில் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி, தனது பெயரில் 14 பெயர்களைக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வழக்கமாக இடமாற்றங்களை அறிவிக்கும் பொலிஸ் அறிக்கையின் ஊடாக, இந்த விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது. ஹக்மன திஸாநாயக்க வாசல பண்டார அமுனுகம விஜேரத்ன குணதிலக்க ரஞ்ஜநாயக்க பண்டாரலாகே ஹக்மன வலவ்வே அனுருந்த பண்டார ஹக்மன என்பதே அவருடைய பெயராகும். Read more

colombo universityகொழும்பு பல்கலைக்கழக மாணவர் குழுக்கள் இரண்டுக்கிடையே நேற்றிரவு இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து கலைப்பீடத்தைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கலைப்பீடத்தைச் சேர்ந்த 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கே வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பீடாதிபதி கலாநிதி அத்துல ரணசிங்க தெரிவித்தார். ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள கொழும்பு பல்கலைக்கழக மாணவர் விடுதியில் வைத்தே இம்மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த நால்வர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. மோதலையடுத்து குறித்த விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

sdfதிருகோணமலை நகரில் மனையாவெளி கிராமசேவகர் பிரிவில் உள்ள உட்துறைமுக வீதியை அண்டியுள்ள கடலில் நேற்றுமாலை கரைவலையை பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில் 12 டொல்பின் மீன்கள் சிக்கி இறந்துள்ளன.

அதையடுத்து திருகோணமலை விஷேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் கரைவலையை இழுத்த மீனவர்கள் 9பேரை கைதுசெய்ததுடன் 12 டொல்பின்களையும் கைப்பற்றி திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். 9 மீனவர்களையும் 12 டொல்பின்களையும் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கைகளில் துறைமுக பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.