Header image alt text

qwerqweqகேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த கிராமத்தையும் தமது சொத்துக்களான காணிகள் மற்றும் குடியிருந்த வீடுகள் என்பனவற்றையும் கையகப்படுத்தி அதில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி கடந்த 11 நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவ தலைமையக வாயில் முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பதினொரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு தமது சொந்த நில விடுவிப்பு தொடர்பில் சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் இன்று முதல் குறித்த கிராமத்தை சேர்ந்தச் இளைஞர் மற்றும் முதியவர் இணைந்து 2பேர் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை படைத்தலைமையக வாயில் முன்பாக முன்னெடுத்துள்ளனர். தமது சொந்த நிலங்களில் ஆக்கிரமித்துள்ள படையினர் அதிலுள்ள வளங்கள் அனைத்தையும் தாம் அனுபவித்துக்கொண்டு வாழ்வதாகவும் தம்மை தமது சொந்தநிலங்களில் குடியமரவிடாது தமது கிராமத்துக்கு ஊடாக செல்லும் பிரதான வீதியை கூட மறித்து பாரிய கதவு ஒன்றினை அமைத்துள்ளனர். Read more

protest newகிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகள் கோரி கடந்த 4ஆம் திகதி முன்னெடுத்திருந்த கவனஈர்ப்பு போராட்டம் இன்று எட்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

கடந்த 1990ஆம் ஆண்டு முதல் குடியிருப்பு காணிக்கான ஆவணம், நிரந்தர வீட்டுத் திட்டம் ஆகியன இதுவரை அரசிடமிருந்து கிடைக்காததினாலே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு முடிவு வரும்வரை போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

asfasமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாகிரக போராட்டம் இன்று 18ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இதுவரை தமது போராட்டத்திற்கு எவ்விதமான தீர்வுகளும் கிடைக்கவில்லையென போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் மனவேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

சகல தரப்பினரும் தமக்கு ஆதரவு வழங்கிவரும் நிலையில் அரசு தம்மை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையளிப்பதாகவும் பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

dவவுனியாவில் தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று 16ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச் சட்டத்தினை நீக்குமாறு கோரியும் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

vaவவுனியாவில் கடந்த 16 தினங்களாக கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்களால் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் காலை 11.00 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி கண்டி வீதிவழியாக, மணிக்கூட்டக்கோபுர ஊடாக பசார் வீதி. இலுப்பையடி சென்று, அங்கிருந்து, நீதிமன்ற வீதியூடாக காணாமற்போன உறவினர்கள் மேற்கொண்டு வரும் உணவு தவிர்ப்பு இடத்திற்குச் சென்று தமது ஆதரவினை வழங்கியுள்ளனர். Read more

fdfdகொழும்பிலிருந்து மட்டக்களப்பு ஊடாக அக்கறைப்பற்றை நோக்கிப் பயணித்த (அல் ராஷித்) தனியார் பஸ்ஸ_க்கு, இன்றுஅதிகாலை 4மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவில் வைத்து, கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினால் குறித்த பஸ்ஸின் இடது பக்க கண்ணாடிகள் இரண்டு சேதமடைந்துள்ளன.

கல்வீச்சுக் காரணமாக பாரிய சத்தத்துடன் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியமையினால், பயணிகளில் சிலர், சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அக்கரைப்பற்று – மட்டக்களப்பு ஊடாக கொழும்புக்கு இரு வழிப் பாதை பயணத்தில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கிடையில் ஏற்பட்டு வரும் தீவீர தொழில் போட்டியினால் பயணிகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. Read more