Header image alt text

madu trainஇன்று நள்ளிரவு முதல் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடத் தீர்மானித்துள்ளதாக, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இன்று பிற்பகல் கூடிய தமது சங்கத்தின் நிறைவேற்று குழு, வேலை நிறுத்தத்தைக் கைவிட முடிவுசெய்துள்ளதாக அச் சங்கத்தின் தலைவர் இந்திக்க ருவன் பதிரண தெரிவித்துள்ளார். இன்று காலை அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

dfsddsதிருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களது தொன்மைகளை வெளிப்படுத்தும் இடங்கள், ஆலயங்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியமான அடையாளங்கள், கல்வெட்டுகள் என்பன சிதைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருவதோடு தொல்பொருள் திணைக்களத்தின் பெயரால் அவை அபகரிக்கப்படுவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனங்கள் அதிகரிப்பதோடு தேசிய நல்லிணக்கம் ஏற்படுவதில் இடைவெளிகளே எனவும் குறிப்பிட்டுள்ளார். Read more

Mannar PLOTE Candidate iruthayanathan Charlesதென்பகுதி மீனவர்களால் வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியபோதும் தற்போதுவரையில் பதில்லை.

அவ்வாறான நிலையில் ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் அலுவலகத்தை வடக்கில் அமைப்பதற்கு என்ன காரணம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உற்பத்தி வரி(விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலத்தில் கலந்துகெண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Geneva UNபொறுப்புக்கூறல் பொறிமுறையில் இலங்கை அரசு பன்னாட்டு பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு கோரியுள்ளது.

இலங்கையில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு ஜெனிவாவில் நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1. தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளில் பன்னாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குத்தொடுனர்கள், விசாரணையாளர்களின் பங்களிப்பை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா குழு இலங்கையிடம் கோரியுள்ளது. Read more

dfdமுல்லைத்தீவு – கேப்பாபிலவு இராணுவ முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

மக்களின் போராட்டக் களத்திற்கு இன்று நேரில் சென்ற குறித்த அமைப்பின் பிரதிநிதிகள், மக்களோடு இணைந்து இராணுவ முகாம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ghfhவேலையற்ற பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கையினை நிறைவுசெய்து போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவாக இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கல்லூரிக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more

madu trainரயில் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் அவர்களுக்கான பதவி உயர்வு ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்து, இன்று நள்ளிரவு முதல், 48 மணித்தியாலங்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தபோதும், இதுவரை நிறைவேற்றப்படவில்லை என, அந்தச் சங்கத்தின் செயலாளர் ருவன் பத்திரண, தெரிவித்துள்ளார்.“வேலைநிறுத்த காலத்தில், சகல ரயில் நிலையங்களும் பூட்டப்பட்டிருக்கும் என்றாலும், கொழும்பு நகரை அண்மித்த பிரதேசங்களில், அலுவலக நேரங்கள் மற்றும் பாடசாலை நேரங்களில் சில ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படும். எனினும், எந்தவொரு பயணச்சீட்டுகளும் விநியோகிக்கப்பட மாட்டாது”, எனவும் அவர் கூறியுள்ளார்.

r44வவுனியாவில் தொடர் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் 12ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இவர்களின் போராட்டத்திற்கு இன்று காலை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்களும் தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

அத்துடன் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. கையளிக்கப்பட்டு கடத்தப்பட்ட தமது உறவுகளை ஒப்படைக்குமாறும் அவசரகால சட்டடத்தினை நீக்குமாறும், சிறையிலுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தி இம்மக்கள் தமது போராட்டத்தினை இன்று 12 ஆவது நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.