Header image alt text

demo01கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 4ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மக்கள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே கொழும்பில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. Read more

missingதிருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இணைந்து இன்று திங்கள்கிழமை 16வது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தினை கிழக்கு மாகாண ஆளுநர் பணி மனையின் முன்னே மேற்கொண்டுள்ளனர்.

நேற்று மாலை இவர்கள் திடீரென  எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்துனுடன் பேசும் வகையிலேயே மாலை 5 மணிக்குப் பின்னர் தபால் நிலைய வீதியில் உள்ள அவரின் வீட்டின் முன்னே திரண்டிருந்து ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டார். Read more

ranilநாட்டுக்கு எதிரான ஜெனிவா யோசனை குறித்த விசாரணைகளுக்கு எந்தவொரு மேலைத்தேய தரப்பினரும் தேவையில்லை என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வீரகெடிய பகுதியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், மனித உரிமைகள் ஆணையாளரின் சில கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியது எனவும் சில கருத்துக்களில் உடன்பாடு இல்லை எனவும், பிரதமர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Dayan_Jayatillekaநாட்டில் ஆயுத குழுவை தோற்கடித்து ஜனநாயகத்தை நிலைநிறுத்திக் கொடுத்த பின்னர் சர்வதேச அல்லது தேசிய நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிமன்றங்களை அமைத்து இராணுவத்தை தண்டிக்க முயற்சிப்பது தார்மீக தன்மைக்கு முரணானது. உள்நாட்டு போர்களை வெற்றிகொண்ட நாடுகள் எல்லாம் விசேட நீதிமன்றத்தை நிராகரித்து வரும் நிலையில் நாமாக கழுத்தை நீட்டுகின்றோம் என கலாநிதி தயான் ஜெயதிகல தெரிவித்தார். Read more

sri cinaஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சரும் அரச ஆலோசகருமான ஜெனரல் சேன்ங் வான்குவாங் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே இருந்துவரும் நீண்டகால உறவுகளை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கையின் இறைமைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் சீனாவிடமிருந்து கிடைக்கும் உதவிகளைப் பாராட்டினார். Read more

fusballவவுனியா, யங்ஸ்ரார் உதைப்பந்தாட்ட கழகத்தின் அணித்தலைவர் மீது வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வைத்து இளைஞர் குழுவொன்று தாக்குதல் நடத்தியமையால் அவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று  இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, Read more