airport (2)பிரான்ஸில் இருந்து நேற்றுமாலை நாடு திரும்பிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தந்தையும் மகளும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இருவரும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர் கடந்த 25 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பில் இருந்து வெளிநாடு சென்றிருந்த அ .தியாகராஜா வயது 52 மற்றும் அவரது மகளான தி.ஜனனி வயது 24 ஆகிய இருவருமே இவ்வாறு நேற்றுமாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.