fgfgவவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று 10ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், அவசரகாலச் சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தியும் வவுனியாவில் இவர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.