qqமுல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களின் இரு பிள்ளைகளுக்கு புதிய துவிச்சக்கர வண்டிகள் இன்று புதுக்குடியிருப்பில் வைத்து வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி அனுசரணையினை எமது புலம்பெயர் உறவான கனடா நாட்டைச் சேர்ந்த செந்தூரன் காவியா அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு அவரது பெற்றோர் வழங்கியுள்ளனர்.

கல்வியில் ஆர்வமுள்ள பல துன்பங்களின் மத்தியிலும் கல்வி கற்று வரும் தமக்கு தமது கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக துவிச்சக்கர வண்டிகளை தந்துதவுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க புதுக்குடியிருப்பு விசுவமடுவைச் சேர்ந்த விஐதரன் சௌபனா மற்றும் முள்ளியவளையைச் சேர்ந்த சிவகுமார் தர்சினி ஆகிய இரு மாணவிகளுக்கும் ரூபா 31,000 பெறுமதியான இரு புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ் பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டிற்கு ஒளியேற்றிய காவியா அவர்களின் பெற்றோருக்கு எமது சங்கத்தின் சார்பிலும் பிள்ளைகளின் சார்பிலும் நன்றிகளையும் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கின்றோம்.

(வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம்)

qqq qqqq