maithriரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பினார். மூன்று நாட்கள் ஜனாதிபதி ரஷ்யாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் பல கட்ட சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.

60 வருட கால ரஷ்ய – இலங்கை உறவுகளை மேலும் முன்கொண்டு செல்வதற்கு நட்புறவு மற்றும் சுமூகநிலைமையை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைந்திருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.43 வருடங்களின் பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்கான அழைப்பு கிடைத்தமை இதுவே முதன் முறையாகும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.