tabமீனவர்களுக்கு டெப் கனணியை வழங்கும் வேலைத் திட்டத்திற்காக 149 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.

விஷேடமாக இவை நீரில் விழுந்தாலும் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இவற்றில் மீன்பிடிப்பது தொடர்பான தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தவிர்ப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.