Header image alt text

20 lawமாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்டத்தின்கீழ் தொகுதி மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு தேர்தல் முறை கொண்டு வரப்பட்டுள்ளன. அதற்கான தேர்தல் தொகுதிகளை எல்லையிட்டு தேர்தலை அடுத்த மார்ச் மாதம் நடத்த உத்தேசித்திருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.
குறிப்பாக கிழக்கு மாகாண சபை தொடர்ந்து ஆளுநரின் அதிகாரத்தில் இருப்பதை சிறுபான்மை இன கட்சிகள் விரும்பவில்லை. அது தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள சிறுபான்மை கட்சிகள் விரைவாக தேர்தல் நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கின்றன. Read more

eastern province இதனையடுத்து காலவரையின்றி மாகாண சபை நிர்வாகம் ஆளுநரின் கீழ் வருகிறது.
மாகாண சபையின் அதிகாரங்கள் ஆளுநரின் கீழ் கொண்டு வரப்படுகின்ற அதேவேளை அடுத்த தேர்தலையடுத்து முதலாவது சபை கூட்டம் நடைபெறும் வரை அவைத் தலைவர் சந்திரதாஸ கலப்பதி மட்டும் பதவியில் இருப்பார்.
மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின்கீழ் மாகாண சபை கலையும் நாளிலிருந்து தேர்தல் ஆணையம் ஒரு வார காலத்திற்குள் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்டம் காரணமாக அதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.

children dayசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தி விசேட கவனயீர்ப்பொன்று யாழ்ப்பாணத்தில் இன்று (01) இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது. Read more