Header image alt text

1338249149cataloniya-Lஸ்பெயினிலிருந்து விடுபடுவதற்கான வாக்கெடுப்பை கெட்டலோனியா பாராளுமன்றம் நடத்தியுள்ளது. இதன்படி, சுதந்திரம் பெறவேண்டும் என்பதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. ஸ்பெயின் அரசாங்கம் நேரடி ஆட்சியை திணிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வந்தமையால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

image_c0cbdb5102“உயிரிழந்த தந்தை குறித்து எனது பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. அப்பா எப்ப வருவார்? அப்பா கண்திறந்திட்டாரா? எப்ப பார்ப்பார்? ஏன் வரவில்லை? போஸ்மோட்டத்தில் தந்தையைப் பார்த்துவிட்டு எங்கட அப்பா வெள்ளைதானே ஏன் கறுத்தவர்? வெள்ளையா வருவாரா?

அப்பா வர நாங்கள் பாக்குக்கு போவோம் என்று அடுக்கடுக்காக என் பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. எத்தனை காலம் ஏமாற்றுவது?” என, சுனித்ரா எழுதிய கடிதம் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம், அரியாலை மாம்பழச் சந்தி பகுதி வீடொன்றில் மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய் எழுதிய கடைசிக் கடிதம் பொலிஸில் சிக்கியுள்ளது. Read more

xzczxcவவுனியா உக்கிளாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீட்டுக் கிணற்றில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமையில் இருந்து காணாமல் போயிருந்த 26 வயதுடைய தியாகலிங்கம் ரகுவரன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

indonesia factoryஇந்தோனேசியத் தலைநகரான ஜகத்ராவுக்கு அருகில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இவ் வெடிப்புச் சம்பவத்தில் 46 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் வைத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். Read more

image_933ceab1f1றோகிஞ்சா அகதிகளுக்கு உதவ இலங்கை அரசாங்கம் முன் வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம், தென்கொரியா, கனடா, பிரான்ஸ், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும், பல்வேறு அமைப்புகளும், றோகிஞ்சா அகதிகளுக்கு உதவிகளை வழங்கி வருகின்றநிலையில், குறித்த பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடக செயலாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

arms and ammunitionகிளிநொச்சி வட்டக்கச்சி புழுதியாறு குளத்தில் நேற்றிரவு பல வெடிபொருட்கள் அதிரடிப்படையால் மீட்கப்பட்டுள்ளன. புலிகளின் விமான ஓடுபாதைகள் உள்ள இடத்தில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது 60 மி.மீ 10 மோட்டார் செல்கள், 81 மி.மீ 01 மோட்டார் செல் நேற்று இரவு விசேட அதிரடிப்படையால் மீட்கப்பட்டுள்ளன. Read more

faiser mustafaஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல், நவம்பர் மாதம் 1ஆம் திகதியன்று வெ ளியிடப்படும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

தற்போது நடத்தி கொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன் திருத்தம் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை தேர்தல் முறைமைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் கூட்டம் நாளை ஏறாவூரில் இடம்பெறவுள்ளது. Read more

teacherகல்வி அமைச்சினால் கடந்த மூன்று வருடங்களாக ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதனால் சுமார் ஒரு இலட்சம் ஆசிரியர்கள் பதவி உயர்வினை பெறாத நிலையில் கடமையாற்றி வருவதாக சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read more

image_36f976fbe6ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, வட மாகாண மீன்பிடி விவகார அமைச்சர் கந்தையா சிவநேசன், கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

கௌரவ மகிந்த அமரவீர, பா.உ
கடற்றொழில் அமைச்சர்,
கொழும்பு.

கௌரவ அமைச்சர் அவர்களுக்கு,

கடந்த 20.09.2017 அன்று, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களுடன், வடமாகாண மீன்பிடித்துறை சார்ந்த விடயங்களுக்கான அமைச்சர் என்ற ரீதியில் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கிணங்க, கீழ்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் முக்கியத்துவம் கருதி தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன். Read more

president qatarகட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் அந்த நாட்டின் பிரதமர் சேய்க் அப்துல்லா பின் நசார் பின் காலிபா அல் தானியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை எதிர்காலத்தில் பல்வேறுப்பட்ட துறைகள் ஊடாக மேலும் விஸ்தரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் மின்சாரம் மற்றும் சக்தி வளத் துறைகளில் நிலவும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து ஜனாதிபதி கட்டார் பிரதமருக்கு விளக்கியுள்ளார். அத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பினை கட்டார் பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார். Read more