arms and ammunitionகிளிநொச்சி வட்டக்கச்சி புழுதியாறு குளத்தில் நேற்றிரவு பல வெடிபொருட்கள் அதிரடிப்படையால் மீட்கப்பட்டுள்ளன. புலிகளின் விமான ஓடுபாதைகள் உள்ள இடத்தில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது 60 மி.மீ 10 மோட்டார் செல்கள், 81 மி.மீ 01 மோட்டார் செல் நேற்று இரவு விசேட அதிரடிப்படையால் மீட்கப்பட்டுள்ளன. இரணைமடு விமானப் படையினரால், ராமநாதபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு நீதிமன்ற அனுமதி பெற்று குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான பிரதேசத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.