Header image alt text

tdih-feb01-re-HDஅப்பா, அண்ணா, அச்சச்சோ ஆகிய வார்த்தைகள் ஆங்கில வார்தையாக ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பெறுகிறது. உலகின் முக்கிய மொழிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை தமது அகராதியில் உட்புகுத்துவதை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வழக்கமாக செய்து வருகிறது.

மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இவ்வாறான வார்த்தைகளை சேர்க்கும் நடவடிக்கை இடம்பெறுவது வழக்கம். இந்த ஆண்டு இதுவரை உலகின் பல மொழிகளில் உள்ள சுமார் ஆயிரம் வார்த்தைகள், ஆங்கில வார்த்தைகளாக ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் புதிய பதிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. Read more

wasimரக்பி வீரர் வசிம் தாஜூதீனின் கொலை வழக்குடன் தொடர்புடைய கொழும்பு முன்னாள் பிரதம சட்டமன்ற வைத்திய அதிகாரி, பேராசிரியர் ஆனந்த சமரசேகர இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வசிம் தாஜூதீனின் தலைப்பகுதியின் எச்சங்கள் காணாமற்போனமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னரும் பேராசிரியர் ஆனந்த சமரசேகரவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெற்றிருந்தது. Read more

1428324512body-found-policeதிருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள கிளப்பன்பேர்க் கடற்படை முகாமிலிருந்து கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கடற்படையினரின் உதவியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெக்கிராவ கல்நெவ பகுதியைச் சேர்ந்த பீ.எம். புஷ்பகுமார (வயது (28) எனும் கடற்படை வீரரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு முகாமிற்கு உறங்குவதற்குச் சென்ற கடற்படை வீரரே இன்று காலையில் சடமாக கிடந்ததாக சீனக்குடா பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. Read more

landslide-warningகண்டி ஹேவாஹெட்ட, ருக்கூட் தோட்டத்தில் நிலவும் மண்சரிவு அபாயம் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று கடும் மழை பெய்ததை அடுத்து, முன் எச்சரிக்கையுடன் இவர்கள் சனசமூக நிலையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 17 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 51 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மண் சரிவு அபாயம் காரணமாக இந்த மக்கள் கடந்த வருடமும் இடம்பெயர்ந்திருந்தனர்.

sfsdfsdஉலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு கடவுச்சீட்டு பெற்றுள்ளது. இந்த கடவுச்சீட்டு மூலம் விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும்.

சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம், உலக நாடுகளின் கடவுச்சீட்டுகள் குறித்த தரவரிசையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. விசா இன்றி பயணம் செய்ய அனுமதிப்பதன் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சிங்கப்பூர் 159 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. Read more

USA-GUNS/OBAMA

USA-GUNS/OBAMA

சட்டவிரோதமான ஆயுதங்களைக் கைப்பற்றும் வகையில், கடந்த 20 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், 1,164 ஆயுதங்களும் 3,548 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்தச் சுற்றிவளைப்புத் தேடுதல்கள், 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையிலும் முன்னெடுக்கப்பட்டன. 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரையிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 437 ஆயுதங்களும் 547 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. Read more

sadsdஇலங்கையின் கடற்பிராந்தியத்துக்கு அடுத்த மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் 9 போர்க் கப்பல்கள் வருகைதரவுள்ளனவெனத் தகவல் கிடைத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக பங்களாதேஷ் நாட்டுக்குச் சொந்தமான ளுழஅரனசய யுஎதையn என்ற போர்க் கப்பல், கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்தோனேஷியா, தென்கொரியா, பங்களாதேஷ், இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் போர்க் கப்பல்கள், இலங்கைக்கு வருகைதரவுள்ளனவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தென்கொரிய போர்க் கப்பல்கள் இரண்டு, கொழும்புத் துறைமுகத்தை இன்று வந்தடையவுள்ளன. Read more

reutersபுலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் அகதி விண்ணப்பத்தை நிராகரித்து, அவர்களை இலங்கைக்கு நாடுகடத்த முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நீதிபதிகள் ஆலோசனைக் குழுவின் சட்டத்தரணி ஒருவர், இந்த ஆலோசனையை வழங்கி இருப்பதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்த இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக தொடுத்திருந்த வழக்கின் நிமித்தம், இந்த ஆலோசனை கோரப்பட்டிருந்தது. Read more

manus iland refugeesபப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவின் அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் கடற்கடந்த விசாரணை கொள்கையின் அடிப்படையில், ஈழ அகதிகள் உள்ளிட்ட 700க்கும் அதிகமானவர்கள் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். Read more

Sinniahஇலங்கை கடற்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும், வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, 2017 அக்டோபர் 25ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அட்மிரலாகப் தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1982ம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்த அட்மிரல் சின்னையா 35 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார். இலங்கை கடற்படைத் தளபதியாக கடந்த அகஸ்ட் மாதம் 22ம் திகதி பதவியேற்ற, ட்ராவிஸ் சின்னையா, இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.