Header image alt text

fdgddமட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிரந்தரமாக தமிழ் பிரதிநிதியையே அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டும் எனக்கோரி இன்றையதினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு அருகாமையில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். இந்த நிலையில், புதிய அரசாங்க அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் நில் அல்விஸ் மற்றும் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோருக்கு இடையில் நேற்று முன்தினம் கலந்துரையாடல் இடம்பெற்றது. Read more

rtretஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தின் யாழ்.சென் ஜோன் பொஸ்கோ ஆரம்ப வித்தியாலயத்தின் மாணவிகள் இருவர் மாவட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

194 புள்ளிகளுடன் உதயகுமார் அனந்திகா முதலிடத்தையும், 193 புள்ளிகளைப் பெற்று மைத்திதேயி அனிருத்தன் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சன் கல்லூரியின் டிலக்ஷிகா வனராஜன் 191 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளார். Read more

mark fieldஇரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு ஆசிய மற்றும் பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரித்­தா­னிய அமைச்சர் மார்க் பீல்ட் இன்று இலங்கை வரு­கின்றார். இவர் பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினை சந்­திக்­க­வுள்ளார்.

இச்­சந்­திப்பு கொழும்பில் உள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ராலயத்தில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. வடக்­கிற்கு விஜயம் செய்யும் பிரித்­தானிய அமைச்சர் அங்கு பல­த­ரப்­பட்ட சந்­திப்­பு­களில் கலந்து கொள்ள உள்­ள­துடன் காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யாட வுள்ளார். Read more

scholarship exam2017ம் ஆண்டில் நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தமது பெறுபேறுகளை தெரிந்து கொள்ளலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நீர்கொழும்பு ஹரிஸ்சந்திர மகா வித்தியாலயத்தின் மாணவன் தனுக கிரிஷான் குமார் அதிகூடிய புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். Read more

australiaபபுவா நியூகினியாவின் மனூஸ் தீவில் உயிரிழந்த இலங்கை அகதியின் சடலத்தை, நாட்டுக்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பணம் கோரியதாக கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை என இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

மனூஸ் தீவில், கடந்த திங்கட்கிழமை, இலங்கை அகதியான ரஜீவ் ராஜேந்திரன் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது சடலத்தை, இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் பணம் கோரப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

human rightsதேசிய மனித உரிமைகள் தொடர்பிலான தேசிய செயற்றிட்டம் 2017-2021 தயாரிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இந்தப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பில், நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவிக்கையில், Read more

unஇலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் 2037ஆம் ஆண்டளவில் 22 வீதமாக அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது 14 வீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர் எனவும் இது 2037ஆம் ஆண்டளவில் மேற்குறிப்பிட்டவாறு அதிகரிக்கக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டுத் தகவலை அடிப்படையாக கொண்டே குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. Read more

tryrtytவவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் வியாபாரத்தில் ஈடுபட்ட குழுவினரை நேற்று மாலை 5.30 மணியளவில் வவுனியா 119 பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் வியாபாரம் தொடர்பான கூட்டம் வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த விடுதியினை முற்றுகையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர். Read more