Header image alt text

drown in waterவவுனியா ஈச்சங்குளம் மரவன்குளம் பகுதியில் அமைந்துள்ள வாவி ஒன்றில் நீராட சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றதாக ஈச்சம்குளம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீராடிக் கொண்டிருந்த வேளையில் வலிப்பு நோய் ஏற்பட்டமையினால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது. Read more

eastern universityதமிழ் அரசியற் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியம் இன்று மதியம் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்னால் கோரிக்கை ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். Read more

colombo railwayகொழும்பு பம்பலபிட்டியில் தொடரூந்தில் மோதுண்டு நபரொருவர் இன்று உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 2மணியளவில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர் இந்திய நாட்டவர் என தெரியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. Read more

indian helpஇந்திய அரசின் 90 மில்லியன் ரூபா பெறுமதியில் வாகனங்கள் மற்றும் உபகரண தொகுதிகள் என்பன யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி விவசாய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டன. Read more

armyஇந்த வருடம் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் முதலாவது பொதுமன்னிப்புக் காலம், இன்று முதல் ஆரம்பமானது. குறித்த பொதுமன்னிப்புக் காலம், எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என, இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார். Read more

warships-americaஅமெ­ரிக்­காவின் ஆறு அதி­ந­வீன நாச­காரி போர்க்­கப்­பல்கள் இம்­மாத இறு­தியில் இலங்­கையை வந்­த­டை­ய­வுள்­ளன. விமானம் தாங்­கிய போர்க்­கப்பல் ஒன்­றுடன் இணைந்தே இந்த போர்க்­கப்­பல்கள் இலங்­கையை நோக்­கிய பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளன.

அத்துடன் சீனா, இந்­தியா, பாகிஸ்தான், தென்­கொ­ரிய போர்க்­கப்­பல்­களும் இலங்கை வர­வுள்­ளன. Read more

dqweதமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலையை வலி­யு­றுத்தி வடக்கு கிழக்கு பல்­க­லை­க்க­ழக மாண­வர்கள் இணைந்து மாபெரும் கையெ­ழுத்து போராட்டம் ஒன்றை இன்­றைய தினம் ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக யாழ்.பல்­க­லை­க்க­ழக கலைப்­பீட மற்றும் அனைத்து பீட மாணவர் ஒன்­றி­யங்கள் அறி­வித்­துள்­ளன.

இப் போராட்டம் தொடர்­பாக அவர்கள் அனுப்பி வைத்­துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, வடக்கு, கிழக்கு தழு­விய ரீதியில் அர­சியல் கைதிகள் விடு­த­லையை வலி­யு­றுத்தி வடக்கு கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இணைந்து மாபெரும் கையெ­ழுத்து வேட்டை போராட்­டத்தை மேற்­கொள்ள தீர்­மானம் செய்­துள்ளோம். இப் போராட்டத்தில் நாம் அர­சியல் கைதிகள் தொடர்­பாக பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்தே இப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள்ளோம். Read more

000000000000000000வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக கனடாவைச் சேர்ந்த நலன்விரும்பிகளினால் தேராவில் கிழக்கு உடையார்கட்டை முகவரியாக கொண்ட தனபாலசிங்கம் சோபனா எனும் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்க்கு ரூபா 208,000 செலவில் புதிய கிணறு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

தனபாலசிங்கம் சோபனா அவர்கள் கடந்த 15.06.2017 ஆம் திகதி தனது விண்ணப்பத்தில் தெரிவித்ததாவது, தனது கணவன் கடந்த கால யுத்தத்தின்போது காணமால் ஆக்கப்பட்டுள்ளதுடன். மூன்று பிள்ளைகளுடன் அன்றாடம் கூலித் தொழில் செய்து தனது குடும்பத்தினை கொண்;டு நடத்துவதுடன் தான் மீள்குடியேற்றம் தாமதமாகியதனால் வீட்டுத்திட்டமும் கிடைக்கவில்லை. Read more

zinso abezஜப்பானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி, 312 இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

வடகொரியா மீது உலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இதையடுத்து, வடகொரியாவுக்கு எதிரான ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நடவடிக்கை குறித்து நடத்தப்பட்ட மாதிரி வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 44 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். Read more

train yaldeviநாவற்குழி பாலம் ஒன்றை சீரமைக்கும் நடவடிக்கை காரணமாக இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, 5 நாட்கள், வடக்கு தொடரூந்து சேவையின் நாவற்குழி மற்றும் யாழ்ப்பாணம் வரையான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

தொடரூந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் கொழும்பில் இருந்து நாவற்குழி வரை மாத்திரமே தொடரூந்து சேவை இடம்பெறும் என தொடரூந்து கண்காணிப்பாளர் விஜய் சமரசிங்க தெரிவித்தள்ளார். ஆயினும் கொழும்பிலிருந்து நாவற்குழி வரையான ரயில் சேவைகள் வழமைபோல முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். Read more