Header image alt text

aSDAநல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்து அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காமல் அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதிய ஜனநாயக மாக்சிஷ லெனினிச கட்சியும், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் இணைந்து யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இன்று முற்பகல் 10.30 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தன. Read more

land protestமட்டக்களப்பு, கல்குடா தொகுதியிலுள்ள உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, வாழைச்சேனையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று, இன்று நடைபெற்றது.

வாழைச்சேனை பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். வாழைச்சேனை, கைலாயப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதேச செயலகத்தில் முடிவடைந்தது. அங்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை, உதவித் திட்டமிடல் பணிப்பாளரிடம் பேரணியில் கலந்துகொண்டோர் கையளித்தனர்.

ghghghgஇந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின்போதும், எனைய எந்த பூசைகளின்போதும் மிருகங்களை பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இத் தடை உத்தரவினை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பாக ஒரு பொதுமகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாலும் அது தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து குற்றமிழைத்தவரை கைதுசெய்து அருகிலுள்ள நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். Read more

election meetநடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் நிலவுகின்ற சிக்கல்கள் குறித்த, கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்று அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நாளை மறுதினம் (26.10.2017) பிற்பகல் 3மணியளவில் தேர்தல்கள் செயலகத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் நடைபெறவுள்ளது.

meetingஆசிய வலய நாடுகளின் வனத்துறை ஆணைக்குழுவினது 27வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. 31 நாடுகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தொடரின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவுள்ளார்.

புவி வரைபடத்தில் வனப்பகுதிகளின் நிலவுகை எனும் தொனிப்பொருளில் இம்முறை மாநாடு இடம்பெறுவதாக வனப் பாதுகாப்பு நாயகம் அநுர சதுருசிங்க தெரிவித்தார். இம்முறை மாநாட்டில் வன மறுமலர்ச்சிக்கு நடவடிக்கைகள் பல எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

nimalபுதிய அரசியல் யாப்பின் ஊடாக அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளும் போது, மாகாண சபைகள் அரசாங்கத்தின் கீழ் செயற்படும் வகையிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபத் தலைவரும், அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பு இன்னும் தயாரிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னர் அது குறித்து பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பியும் கோரி வருகின்றன. Read more

asdsadasdகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக உறுப்பினர்களை தெரிவுசெய்ய அரசியல் அமைப்பு சபையினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.விண்ணப்பதாரிகள் உண்மை கண்டறியும் நடவடிக்கைகளில் முன் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும் என அரசியல் அமைப்பு சபையின் பதில் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். Read more

asdsdassயுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது. அதனை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். யுத்த வெற்றிவீரர்களை இவ்வாறு பாதுகாப்பதாக கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை மீறுவதைப் போன்றதாகும் என்று இலங்கைக்கான விஜயத்தை முன்னெடுத்த

உண்மை, நீதி, நட்டஈடு, மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் தெரிவித்தார். இதற்கு சிறந்த உதாரணமாக பிரேஸிலில் அண்மையில் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை குறிப்பிடலாம். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்தும் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Read more