Header image alt text

nuwaraeliya.jpgஉள்ளூராட்சி மன்ற புதிய சீர்திருத்தத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்திற்கு 04 புதிய பிரதேச சபைகளை ஸ்தாபிப்பதற்கு யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தாக அரசியல் கட்சிகளுடன் நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி கூறினார்.

இது சம்பந்தமான யோசனை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களும் இதற்கு உடன்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறினார். Read more

patti-01மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் மகனும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

புன்னக்குடாவில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே 27 வயதுடைய தாயும் அவரது 11வயது மகனும் கழுத்து வெட்டபட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். Read more

missing01கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய வத்சலா பெரேரா உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 வயது மற்றும் 14 வயதுடைய ஏனைய இரண்டு சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். Read more