Header image alt text

uniஅரசியல் கைதிகளின் நியாயம் கோரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு உடனடி தீர்வை வழங்குமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். Read more

missingமூன்று நாட்களாக காணமல் போயுள்ள இளம் தாய் மற்றும் இரு சிறுமியர் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த, ஒன்றரை வயதான குழந்தையின் தாயான, 19 வயதுடைய வத்சலா பெரேரா அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரி மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் 14 வயதான தமிழ் சிறுமி ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more

autoமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்லோ பகுதியில் நேற்று இரவு இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுங்காயமடைந்துள்ளனர்.

மஸ்கெலியா – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் மஸ்கெலியா பகுதியிலிருந்து பிரவுண்லோ நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் மவுஸ்ஸாக்கலையிலிருந்து மஸ்கெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் மஸ்கெலியா பிரவுண்லோ பகுதியில் மோதியுள்ளன. Read more