autoமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்லோ பகுதியில் நேற்று இரவு இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுங்காயமடைந்துள்ளனர்.

மஸ்கெலியா – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் மஸ்கெலியா பகுதியிலிருந்து பிரவுண்லோ நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் மவுஸ்ஸாக்கலையிலிருந்து மஸ்கெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் மஸ்கெலியா பிரவுண்லோ பகுதியில் மோதியுள்ளன.இவ்விபத்தில் இரு முச்சக்கரவண்டியிலும் பயணித்த 6 பேர் கடும்காயமடைந்துள்ளனர். அவர்கள் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக அதிக வேகம் மற்றும் கட்டுப்பாடு இல்லாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய இரு முச்சக்கர வண்டிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்