Header image alt text

759724058chandrika-speech-Lமத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது வட மாகாண அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன், மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கலந்துரையாடினார். நுன் கடன் திட்டம் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. நுன் கடனைப் பெற்று பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது. இதனையடுத்து கருத்துத் தெரிவித்த இந்திரஜித் குமாரசுவாமி,

பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். வடக்கில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அனைவரையும் எம்மால் சந்திக்க முடியாது. எனினும், பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களின் நலன் கருதி எம்மால் நிறைவேற்ற முடியுமான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். Read more

trinco oil tanksதிருகோணமலை எண்ணெய் தாங்கி திட்டத்தினை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீதி, பெற்ரோலிய துறை மற்றும் திருகோணமலை துறைமுக மற்றும் மின்சக்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், இந்தியாவும் இலங்கையும் இணைந்து தொழிற்படும் குழு ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையே இந்த குழுவின் ஊடாக திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், எனினும், இந்த விடயம் குறித்த இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். Read more

SDFDSகிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்து படித்த சிறுவன் ஒருவனை அச் சிறுவர் இல்ல பொறுப்பாளர்கள் மூர்க்கத்தனமாக தாக்கி சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியை சேர்ந்த தனுஜன் என்ற சிறுவனே இவ்வாறு மூர்க்கத்தனமாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையான பிறேம்குமார் ஊடகமொன்றுக்கு கூறுகையில்,
Read more

aSasதமிழகத்தின் 20 ஆவது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். தமிழக அரசின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், அரசியலைப்பு சட்டத்திற்கிணங்க அரசியல் சார்பின்றி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்தப் பதவி ஏற்பு நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆளுநருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். Read more

hampanthotaமாகம்புர துறைமுகம், மத்தல சர்வதேச விமான நிலையம் என்பவற்றை நீண்ட கால குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதற்கு எதிராக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 26 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட தீவிர நிலையை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் 3 பேர் காயமடைந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

british representative metஇலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்ட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இன்றையதினம் காலையில் சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தாங்கள் நீண்ட நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் எதுவித தீர்ப்பும் தங்களுக்கு கிடைக்கவில்லை என கூறியதோடு, தாங்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றியும் அவரிடம் எடுத்து கூறினார்கள்.

pick meபிக் மீ வாடகை வாகன நிறுவனத்துக்கு எதிராக அதன் முச்சக்கரவண்டி சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நுகேகொடையில் அமைந்துள்ள பிக் மீ நிறுவனத்தின் முன்பாக இன்றுகாலை முதல் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிக் மீ நிறுவனமானது தற்போது வாடகை சேவையில் ஈடுபடுத்தி வரும் முச்சக்கரவண்டிகளுக்கு பதிலாக சிறிய ரக டாடா மற்றும் நெனோ வாகனங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

mark fieldஐக்கிய இராச்சியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்ட் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகளை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையைக் கண்டறியும் நோக்குடன் இலங்கை வந்துள்ள அவர், நேற்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இதன்போது புதிய அரசியல் யாப்பு விவகாரம், வடகிழப்பு இணைப்பு, மனித உரிமைகள், காணாமல் போனோர் விவகாரம் மற்றும் மறுசீரமைப்பு உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. Read more

jailஅநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டம் கடந்த பதினொரு நாட்களாக தொடர்கின்றது.

வவுனியா மேல்நீதிமன்றில் நடைபெற்றுவந்த வழக்கு விசாரணையை அநுராதபுரம் மேல்நீதிமன்றுக்கு இடம் மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவர்கள் உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளனர். இராசதுரை திருவரன், மதியழகன் சுலக்சன், கணேசன் தர்சனன் ஆகிய மூவரும் அநுராதபுரம் சிறையில் கடந்த 8வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். Read more

namalநாம் நீதிமன்ற உத்தரவை மதிப்பதுடன் திட்டமிட்டபடி எமது ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஹம்பாந்தோட்டை நீதிமன்ற வளாகத்தில் இன்றைய தினம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காலி நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது. தங்காலை கால்டன் இல்லத்தின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more